மகிமை நிறைந்த மங்கள வார்த்தை செபம்.

எக்காலக் கிறிஸ்தவர்களோடும் நாமும் ஒன்றித்து மரியன்னையைப் புகழுவோமாக, வல்லமைமிக்க அவரது பாதுகாப்பில் நம்மை ஒப்படைப்போமாக.

அருள் நிறைந்த மரியே வாழ்க!
கர்த்தர் உம்முடனே!
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே!
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே!
அர்ச்சியசிஷ்ட மரியாயே!
சர்வேசுரனுடைய மாதாவே!
பாவிகளாயிருக்கிற எங்களுக்காக,
இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்.
ஆமென்.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக, சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

செபிப்போமாக.
ஓ! ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே! உமது தாயாகிய மரியம்மாளை, அவருடைய அற்புதச் சாயலை வணங்கும் எங்களுக்கு என்றும் உதவிசெய்ய தயாராக இருக்கும் மாதாவாகக் கொடுத்திருக்கிறீரே! ஆவருடைய தாய்க்குரிய சலுகைகளை தேடுகிற நாங்கள் உமது இரட்சண்யத்தின் பேறுபலன்களை நித்தியத்துக்கும் அனுபவிக்கும் பாக்கியவான்கள் ஆகும்படி எங்களுக்கு கிருபை செய்தருளும். என்றென்றும் சீவித்து ஆட்சி புரியும் சர்வேசுரா.

ஆமென்.