தேவமாதாவுக்கு தன்னை முழுவதும் ஒப்புக்கொடுக்கும் ஜெபம்

என் ஆண்டவளே! என் தாயாரே! இதோ என்னை முழுமையும் தேவரீருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன்.  தேவரீர் பேரில் அடியேன் வைத்த பக்தியைக் காண்பிக்கத் தக்கதாக, இன்றைக்கு என் கண் காதுகளையும், வாய் இருதயத்தையும், என்னை முழுமையும் தேவரீருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக் கிறேன்.  என் நல்ல தாயாரே, நான் தேவரீருக்குச் சொந்தமாயிருக்கிறபடியினாலே, என்னை உம்முடைய உடமையாகவும், சுதந்திரப் பொருளாகவும் ஆதரித்துக் காப்பாற்றியருளும். ஆமென். (100-நாள் பலன்)

என் ஆண்டவளே! என் தாயாரே! நான் தேவரீருக்குச் சொந்தமாயிருக்கிறேனென்று நினைத்துக் கொள்ளும்.  என்னை உம்முடைய உடைமையாகவும் சுதந்திரப் பொருளாகவும் ஆதரித்துக் காப்பாற்றியருளும்.  ஆமென். (40 நாள் பலன்)