விசுவாசப்பிரமாணம் 2

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன் . அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய ஆண்டவர் ஏசுக் கிறிஸ்துவை விசுவசிக்கிறேன் . இவர் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பமாய் உற்பவித்து அர்சிஷ்ட கன்னி மரியாளிடமிருந்து பிறந்தார்.போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார் . பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார் . அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். அர்ச்சிச்டவர்களுடைய சமூதீத பிரயோசனத்தை விசுவசிக்கிறேன். பாவப் பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய ஜீவியத்தை விசுவசிக்கிறேன்

ஆமென்.