வேதசாட்சிகளின் இராக்கினியான மாமரியை நோக்கி ஜெபம்

மகா பரிசுத்த கன்னிகையும், வேதசாட்சிகளின் இராக்கினியுமான மரியாயே, என் மகனுக்குரிய நேசத்தின் உண்மையுள்ள மரியாதையை ஏற்றுக்கொள்ளும். மிக அநேக வாள்களால் ஊடுருவப்பட்ட உமது மாசற்ற இருதயத்திற்குள் என் எளிய ஆத்துமத்தை ஏற்றுக்கொள்ளும். உலக இரட்சணியத் திற்காக சேசுநாதர் மரிக்கத் திருவுளமான திருச்சிலுவையின் அடியில் அடியேனை உம்முடைய வியாகுலங்களின் அன்ப னாக ஏற்றுக்கொள்ளும். வியாகுலம் நிறைந்த கன்னிகையே, எத்தகைய துன்ப சோதனைகளையும், எதிர்ப்புகளையும், நோய் களையும் எனக்கு அனுப்ப நம் ஆண்டவர் சித்தங்கொள் கிறாரோ, அவற்றையெல்லாம் உம்மோடு சேர்ந்து நான் மகிழ்ச்சியோடு ஏற்று தாங்கிக் கொள்கிறேன். என் மனதின் ஒவ்வொரு நினைவும், என் இருதயத்தின் ஒவ்வொருதுடிப்பும் உமக்கான தயவிரக்கத்தினுடையவும், நேசத்தினுடையவும் ஜெபமாக இருக்கும்படியாக, என் துன்பங்கள் எல்லாவற் றையும் உமது வியாகுலங்களின் நினைவாக, உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். மகா மதுரமுள்ள மாதாவே, என் மீது தயவா யிரும், உமது திருக்குமாரனாகிய சேசுவோடு என்னைத் திரும்பவும் ஒன்றித்தருளும்; அவருடைய வரப்பிரசாதத்தில் நான் நிலைத்திருக்க எனக்கு அருள்வீராக. அடியேன் மோட்சத்தில் தேவரீரை சந்தித்து, என்றென்றும் உமது மகிமைகளைப் பாடிக் கொண்டிருக்கும்படியாக, என் மரண அவஸ்தையில் எனக்கு உதவி செய்தருளும். ஆமென்.