திருப்பலிக்குச் செல்லும்போது தவிர்க்கப்படவேண்டியவை!

பெண்கள் கவனத்திற்கு :

1. பேன்ட் சர்ட அணிந்து செல்வது
2. லெக்கின்ஸ் போன்ற ஆபாச உடைகள் அணிந்து செல்வது
3. அடுத்தவரை ஈர்க்கும் ஆடைகள் அணிவது
4. ஆடம்பரமான ஆடைகள் அணிவது
5. மேக்கப் மற்றும் அழகு சாதனங்கள்
6. தலைக்கு முக்காடிடாமல் திருப்பலியில் பங்கேற்பது.

ஆண்கள் கவனத்திற்கு :

1. காலர் இல்லாத டீ சர்ட் அணிவது
2. ஸ்போர்ட் சட்டைகள் மற்றும் பேண்ட் அணிதல்
3. முக்கால் பேண்ட் அணிதல்
4. மற்றவர்களை கவர்ந்து இழுக்கும் ஆடைகள் அணிவது
5. நடிகர்கள் மற்றும் பேய் படம் போட்ட பணியன் அணிந்து செல்வது
6. ஆலயத்திற்குள் அமர்ந்து செல்போன்களை நோண்டுவது
7. திருப்பலி நேரத்தில் கோவிலுக்கு வெளியே அமர்ந்து அரட்டை அடிப்பது

பொதுவானவைகள் :

1. பராக்குகள்
2. பக்தியை குறைக்கும் இடைச்செருகல்கள்
3. அருட்தந்தையர்கள் மிக முக்கியமான ஜெபங்களை பாடும்போது பிண்ணணி இசை கொடுப்பது.
4. காதைப்பிளக்கும் ஸ்பீக்கர்கள் நாலாபுறமும் அலறுவது
5. எல்லோரும் சேர்ந்து ஜெபிக்கும் பாடல்களுக்கு அடிக்கடி டியூன் மாற்றுவது. சில நேரங்களில் பாடலையே மாற்றி விடுவது. இதனால் பாடல் குளுவினர் தவிர யாரும் வாயைக்கூடஅசைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
6. எல்லாமே புதிய பாடல்களாகவே பாடுவது (எல்லோருக்கும் தெறிந்த ஒன்றிரண்டு பாடல்களையாவது பாட வேண்டும்)
7. அன்பியங்கள் போட்டி மனப்பான்மையில் ஆடம்பரங்களை அதிகரிப்பது
8. வருகைப்பாடல் நடனம், பொன்னாடை போர்த்துதல், கும்பம், கரவொலி, போன்ற ஆடம்பரங்கள். இன்னும் பல நவீனங்கள் புகுத்தப்படுவது..

மொத்தத்தில் திவ்ய பலிபூசை ஆடம்பரம், உலக காரியங்கள் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு எளிமையோடும், பக்தியோடும் ஆராதனை மன நிலையோடும் நடத்தப்பட வேண்டும்!