பாவத்தின் ஏழு வேர்கள்

ஏழு தலையான பாவங்களாகிய இந்த ஏழு வேர்களிலேயே நம் எல்லாப் பாவங்களையும் நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும். பாவத்தின் இந்த ஏழு ஆதாரங்களும், சரீரத்தைப் பாதிக்கிற நோய்களோடு ஒப்பிடப் பட்டிருக்கின்றன. ஆங்காரம் ஞானப் புற்று நோயாகும். அது நம் உயிர்த்துடிப்பைத் தின்று அழித்து விடுகிறது. உலோபித்தனம் என்பது ஞான எலும்புருக்கி நோய், அல்லது காச நோயைப் போன்றது. அது ஆத்துமத்தின் உள்ளார்ந்த வல்லமைகளைப் பாழாக்கி விடுகிறது. மோகம் என்பது ஞானத் தொழுநோயாகும். கோபம் ஒரு விஷக் காய்ச்சலாகும். பொறாமையோ இரத்த நச்சுத்தன்மை ஆகும். போசனப் பிரியம் மரணத்தில் முடியக் கூடிய ஒரு வகை உறக்க நோய் ஆகும். சோம்பல் என்பது ஆத்துமத்தின் பக்கவாதம் ஆகும். அது அந்த ஆத்துமத்தின் முன்னேற்றத்தைத் தடுத்து, வரப்பிரசாத வழிகளை நாம் அலட்சியம் செய்யச் செய்கிறது; நம் இரட்சணியத்தில் கவலையற்றவர்களாக இருக்கச் செய்கிறது; மரண வேளையிலும் நாம் மனந்திரும்பாதபடி தடுத்து விடுகிறது. மரண வேளையிலும் மனந்திரும்பாத இந்தப் பரிதாப நிலைக்கு, ஆங்காரமும், சோம்பலுமே பெற்றோராக இருக்கின்றன.

இந்தத் தலையான பாவங்களின் இயல்பையும், விளைவுகளையும் புரிந்து கொள்வதே, அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான முதற்படி ஆகும். எனவே நம் போராயுதங்களை ஏந்தி, போர்க்களத்துக்குச் செல்வோமாக! எப்படி இருக்க சித்தங் கொள்கிறோமோ, அப்படியே நாம் இருப்போம்!