4-ம் நாள் அர்ப்பணம்

துவக்க ஜெபம்:

ஆண்டவரே! உமது பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எங்கள் கிரியைகளுக்கு முன் செல்வீராக. உமது வரப்பிரசாத உதவியால் அவைகளை நீரே முற்றுப்பெறச் செய்வீராக. இதனால் எங்களின் சகல ஜெபங்களும் ஞானக் கிரியைகளும் உம்மால் தொடங்கப்பட்டு உம்மாலேயே முடிவடையக்கடவன. எங்கள் ஆண்டவராகிய சேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே. ஆமென்.

தேவ சம்பந்தமான புண்ணியங்களைக் கேட்டு மன்றாடுவோமாக.

விசுவாசம்: என் சர்வேசுரா சுவாமி! திருச்சபை விசுவசித்துக் கற்பிக்கிற சத்தியங்களையெல்லாம் தேவரீர் தாமே அறிவித்திருப் பதினால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன். ஆமென்.

நம்பிக்கை: என் சர்வேசுராசுவாமி! தேவரீர் வார்த்தைப்பாடு கொடுத்திருக்கிறபடியினால், சேசுநாதர் சுவாமி பாடுபட்டுச் சிந்தின திரு இரத்தப் பலன்களைப் பார்த்து என் பாவங்களையெல்லாம் பொறுத்து, எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருளுவீரென்று முழுமனதோடு நம்பியிருக்கிறேன். ஆமென்.

தேவ சிநேகம்: என் சர்வேசுராசுவாமி! தேவரீர் மட்டில்லாத சிநேகத்துக்குப் பாத்திரமாயிருக்கிறதினாலே எல்லாவற்றிக்கும் மேலாக உம்மை நான் முழுமனதோடு சிநேகிக்கிறேன். மேலும் உம்மைப் பற்றி என்னை நான் நேசிக்கிறது போல மற்றெல்லாரையும் நேசிக்கிறேன். ஆமென்.

மாதாவுக்குப் பாத்திமா அர்ப்பண ஜெபம்:

எங்கள் அன்புத் தாயும் அரசியுமான மரியாயே! ரஷ்யாவை மனந்திருப்பி உலக மக்களுக்கு சமாதானம் தருவேனென்று பாத்திமாவில் வாக்களித்தீரே. எங்களுடையவும் உலகத்தினுடையவும் பாவங்களால் உமது மாசற்ற இருதயத்துக்கு நேர்ந்த சகல நிந்தை அவமான துரோகங்களுக்குப் பரிகாரமாக, எங்களுக்கு வருகிற துன்பங்களைப் பரித்தியாகமாக ஏற்றுக் கொள்கிறோம். ஐம்பத்து மூன்று மணி ஜெபமாலையை தியானித்துச் சொல்வோம். எங்களை உம்முடைய மாசற்ற இருதயத்துக்கு ஒப்புக் கொடுக்கிறோம். அதன் அடையாளமான கார்மெல் உத்தரியம் அணிகிறோம். இவ்வர்ப்பணத்தை அடிக்கடி விசேஷமாய் சோதனை நேரத்தில் புதுப்பிப்போம் தாயே ஆமென்.

1 அருள் நிறைந்த...



(மாதாவுக்கு நாம் செய்யும் இவ்வர்ப்பணத்தின் அடையாளம் கார்மெல் உத்தரியம் அணிந்திருத்தலாகும். உத்தரிய சாலையில் சேர்ந்து அதை அணிவோமாக)



ஞானஸ்நான வார்த்தைப்பாட்டை புதுப்பித்தல்:

நான் என் ஞானஸ்நானத்தில் அனைவருக்கும் கொடுத்த வார்த்தைப்பாடுகளை அவர் முன்பாக புதுப்பித்துக் கொள்கிறேன்.

பசாசையும் அவன் கிரியைகளையும் அவன் ஆரவாரங்களையும் முழு மனதோடு விட்டுவிடுகிறேன். பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் ஏசு கிறிஸ்து மனிதனாகப் பிறந்தாரென்றும் நமக்காகப் பாடுபட்டார் என்றும் விசுவசிக்கிறேன். பரிசுத்த ஆவியையும், பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்தலிக்கத் திருச்சபையையும் அர்ச்சிஷ்டவர்களுடைய சமூக பிரயோசனத்தையும் பாவ பொறுத்தலையும், சரீர உத்தானத்தையும், நித்திய சீவியத்தையும் விசுவசிக்கிறேன்.

மாதாவுக்கு அடிமை சாசனம்:

சகல மோட்சவாசிகளுக்கு முன், கடவுளின் கன்னித் தாயான அமலோற்பவ மரியாயே உம்மை என் அன்னையாகவும் ஆண்டவளாகவும் தெரிந்து கொள்கிறேன். உமது அடிமையாக என் சரீரத்தையும் ஆத்துமத்தையும், என் உள் எண்ணங்களையும் ஐம்புலன்களையும் என் எல்லாவற்றையும் என் ஜீவிய கால முழுவதும் நான் செய்யும் நற்கிரியைகளையும் பலன்களையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். இப்பொழுதும் எப்பொழுதும் கடவுளின் அதிமிக தோத்திரத்துக்காக உமது பிரியப்படி நீரே முழு உரிமையுடன் என்னை ஆண்டு நடத்த கையளிக்கிறேன். ஆமென்.

மரியாயின் மாசற்ற இருதயமே என் இரட்சண்யமாயிரும். (மும்முறை)

பரிசுத்த ஆவிக்கு ஜெபம்:

பரிசுத்த ஆவியே! தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலிருந்து உம்முடைய திவ்ய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும். தரித்திரருடைய பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இருதயங்களின் பிரகாசமே எழுந்தருளி வாரும். உத்தம ஆறுதலானவரே! ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாடியே! பேரின்பரசமுள்ள இளைப்பாற்றியே! பிரயாசத்தில் சுகமே, வெயிலிற் குளிர்ச்சியே. அழுகையில் தேற்றரவே எழுந்தருளி வாரும். வெகு ஆனந்தத்தோடு கூடியிருக்கிற பிரகாசமே, உம்முடைய விசுவாசிகளின் இருதயத்தின் உற்பனங்களை நிரப்பும். உம்முடைய தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்ற மில்லாதது ஒன்றுமில்லை. அசுத்தமாயிருக்கிறதைச் சுத்தம் பண்ணும். உலர்ந்ததை நனையும். நோவாயிருக்கிறதைக் குணமாக்கும். வணங்காததை வணங்கப் பண்ணும். குளிரோடிருக் கிறதைக் குளிர் போக்கும். தவறினதைச் செம்மையாய் நடத்தும். உம்மை நம்பின் உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புண்ணியத்தின் பேறுகளையும் நல்ல மரணத்தையும் நித்திய மோட்ச ஆனந்தத்தையும் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி . ஆமென்.

சமுத்திரத்தின் நட்சத்திரமே:

1. சமுத்திரத்தின் நட்சத்திரமே வாழ்க! கடவுளின் கருணையுள்ள தாயே! எப்பொழுதும் கன்னிகையே! மோட்சத்தின் இனிய வாசலே வாழ்க!

2. கபிரியேல் தூதன் உரைத்த, மங்கள் வாழ்த்துரையை ஏற்று, ஏவையின் பெயரை மாற்றிய தாயே! சமாதானத்தில் எங்களை நிலை நிறுத்துவீராக.

3. குற்றவாளிகளின் பாவ விலங்கை அறுப்பீராக. பாவ இருளில் உள்ளோருக்கு ஒளியருள்வீராக. எங்கள் எல்லா தீமைகளையும் நீக்கி நலன் அனைத்திற்காகவும் மன்றாடுவீராக.

4. தாயென்று உம்மைக் காட்டும் எங்களுக்காக உமது மகவாகப் பிறந்த தேவசுதன் உம் மன்றாட்டின் மூலம் எங்கள் வேண்டுதலை ஏற்பாராக.

5. கன்னியருள் சிறந்த கன்னிகையே! அனைவரிலும் மிக சாந்தமுள்ள அன்னையே! எங்கள் பாவங்களிலிருந்து எங்களை விடுவியும்; சாந்தமும் கற்பும் உள்ளவர்களாக்கும்.

6. பழுதற்ற வாழ்வை எங்களுக்குத் தாரும். உமது குமாரன் சேசுவை நாங்கள் கண்டு என்றும் மகிழ்ந்திருக்க எங்கள் பாதையை பத்திரமாய்க் காத்தருள்வீராக.

7. தேவ பிதாவுக்கும், துதி உயர் கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியான தேவனுக்கும், திரித்துவரான ஏக கடவுளுக்கும் புகழ்ச்சியும் மகிமையும் உண்டாவதாக. ஆமென்.

மரியாயின் கீதம்:

(லூக் 1:47 - 55).

என் ஆத்துமம் ஆண்டவரை மகிமைப்படுத்துகின்றது. என் இரட்சண்யமாகிய சர்வேசுரனிடத்தில் என் மனமும் ஆனந்தமாய் எழும்பி மகிழ்கின்றது. ஏனெனில் தனது அடிமையானவளுடைய தாழ்மையைக் கிருபாகடாட்சத்தோடு பார்த்தருளினார் ஆகையால் இதோ இக்கால முதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். ஏனெனில் வல்லபமிக்கவர் பெருமையுள்ளவைகளை என்னிடத்தில் செய்தருளினார். அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. அவருடைய கிருபையும் தலைமுறை தலைமுறையாக அவருக்குப் பயந்து நடக்கிறவர்கள் மேல் இருக்கின்றது. அவர் தம்முடைய கரத்தின் வல்லமையைக் காட்டியருளினார். தங்கள் இருதய சிந்தனையில் கர்வமுடையவர்களைச் சிதறடித்தார். வல்லபமுடைத்தானவர்களை ஆசனத்திலே நின்று தள்ளி தாழ்ந்தவர்களை உயர்த்தினார். பசித்திருக்கிறவர்களை நன்மைகளினால் நிரப்பி செல்வர்களை வெறுமையாய் அனுப்பி விட்டார். தமது கிருபையை நினைவு கூர்ந்து தம்முடைய தாசனாகிய இஸ்ராயேலை ஆதரித்தார். அப்படியே நமது பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஊழியுள்ள காலம் அவர் சந்த்தியாருக்கும் அவர் வாக்குத் தத்தம் பண்ணியிருந்தார்.

நான்காவது நாள்:

கிறிஸ்துநாதர் அனுசாரம் மூன்றாம் காண்டம் அதிகாரம் 40:1-3.

(மனிதன் சுபாவமாய் ஒரு நன்மையுமில்லாதவன், அவன் எதைக் குறித்தும் பெருமை பாராட்டக் கூடாது.)

1. (சீஷன்) ஆண்டவரே! "நீர் மனிதனை நினைப்பதற்கு அவனென்ன?'' நீர் மனிதப் புத்திரனைச் சந்திப்பதற்கு அவனென்ன?'' நீர் உமது வரப்பிரசாதத்தைக் கட்டளையிடுவதற்கு அவன் என்ன பேறுபெற்றவன்? ஆண்டவரே! நீர் என்னைக் கைவிட்டால், நான் முறையிட என்ன காரணம் இருக்கிறது? அல்லது நான் கேட்பதை நீர் செய்யாவிட்டால் நான் ஏதாகிலும் பேச நியாமுண்டோ? சந்தேகமில்லாமல் நான் உண்மையாகவே நினைக்கவுஞ் சொல்லவுங் கூடுமான தேதென்றால்: 'ஆண்டவரே! நான் ஒன்றுமில்லை, என்னால் ஒன்றும் முடியாது, என்னால் உண்டான நன்மையொன்றும் என்னிடம் கிடையாது ; சகலத்திலும் வெறுமையாயிருக்கிறேன். நானாக எப்போதும் ஒன்றுமில்லாமையை நாடுகிறேன். நீர் எனக்கு உதவி செய்து என் உள்ளத்தைச் சீர்படுத்தாவிடில், நான் முழுமையும் வெது வெதும்பும் மனத் தளர்ச்சி உள்ளவனாய்ப் போகிறேன்.

2. "ஆண்டவரே! நீர் இருக்கிற பிரகாரமே எப்போதும் இருக்கிறீர்" நித்தியத்துக்கும் எப்போதும் உத்தமராயும், நீதியுள்ளவராயும், பரிசுத்தராயும் இருக்கிறீர்; சகலத்தையும் நன்றாயும், நீதியாயும், பரிசுத்தமாயும் செய்கிறீர்; சகலத்தையும் ஞானத்தோடு ஒழுங்குபடுத்துகிறீர். நானோவெனில் சாங்கோபாங்கத்தில் விர்த்தியடைவதைவிட பின்னுக்குப் போகச் சார்புள்ளவனாய், ஒரே நிலையில் நிலைத்திராமல், ஒரு நாளைக்குள் என் மனம் ஏழு விசை மாறுகின்றது. ஆயினும் நீர் இஷ்டப்பட்டு எனக்கு உதவியாக உமது கரத்தை நீட்டினால் உடனே எனக்கு மிகவும் சுகமாகின்றது; ஏனெனில் நீர் ஒருவரே மனிதர் துணையில்லாமல் என்னை ஆதரிக்கவும், என் மனம் பலவிதமாய் மாறாமல் உமது பாரிசமாய் மாத்திரம் திரும்பி உம்மில் இளைப்பாறும்படி என்னை உறுதிப்படுத்தவும் கூடுமானவராயிருக்கிறீர்.

3. ஆனதினால் பக்தியின் ஆழத்திற்குள் செல்வதற்காகவாவது எனக்காறுதல் அளிக்க மனிதருக்குச் சக்தியில்லாமையால் நான் உம்மையே நிலையாக தேட வேண்டியதினிமித்தமாவது, நான் சகல மானிட ஆறுதலையும் அகற்றி விட நன்றாய் அறிந்தால், அப்போதுதான் உமது வரப்பிரசாதத்தினால் சகலமும் கைகூடும் என்று நம்பவும், புதிய ஆறுதலைப் பற்றிக் கொண்டு ஆனந்திக்கவும் கூடுமாயிருக்கும்.

முடிவு ஜெபங்கள்:

சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்ட மாதாவே, இதோ உம்முடைய சாரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்வதற்கு நீர் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சமுடையவளுமாய் இருக்கிற நித்திய கன்னிகையே சகல ஆபத்துக்களிலேயும் நின்று எங்களைத் தற்காத்துக் கொள்ளும். ஆமென்.

ஆண்டவர் இயேசுவுக்கும் அன்னை மரியாளுக்கும் மன்றாட்டு:

கிறிஸ்துவின் ஆத்துமமே , என்னைப் புனிதப்படுத்தும்.
மரியாயின் மாசற்ற இருதயமே, எனக்கு உதவும்.

கிறிஸ்துவின் திருவுடலே, என்னைக் காப்பாற்றும்.
என் ஆன்மாவின் அன்னையே, என்னை மனந்திருப்பும்.

கிறிஸ்துவின் திரு இரத்தமே, என்னை மகிழ்வியும்.
மரியாயின் துயரங்களே, என்னை ஊடுருவும்.

கிறிஸ்துவிலாவிலிருந்து வழியும் திருநீரே. என்னைக் கழுவும்.
மரியாயின் கண்ணிரே , என்னைத் தூய்மையாக்கும்.

கிறிஸ்துவின் பாடுகளே, என்னை ஆறுதல் படுத்தும்.
மரியாயின் தனிமையே, என்னை வீழ்ச்சியிலிருந்து தூக்கிவிடும்.

ஓ! என் நல்ல இயேசுவே, என் மன்றாட்டைக் கேட்டருளும்.
ஒ! மரியாயின் மென்மையே, என்னைக் கண்ணோக்கும்.

ஓ! இயசுேவே, உமது திருக்காயங்களில் என்னை மறைத்துக் கொள்ளும்.
ஓ! மரியே உமது ஆன்மாவின் ஆழத்தில், என்னை பற்றி எரியச் செய்யும்.

ஓ! இயேசுவே, தீமையிலிருந்து என்னை தப்புவியும்.
ஒ! மரியே நான் சாகும்போது, என்னை உம் அன்புகரத்தில் தாங்கிக் கொள்ளும்.

ஓ! இயேசுவே, உமது சம்மனசுக்கள் புனிதர்களுடைய குழுவில் என்னை சேர்த்துக் கொள்ளும்.
ஒ! மரியே விண்ணகத்தில் உம்மைக் கண்டடைய எனக்குக் கட்டளையிடும்.


ஆமென்.