ஏப்ரல் 29

அர்ச். இராயப்பர். வேதசாட்சி (கி.பி. 1252) 

அர்ச். இராயப்பர், இத்தாலியா தேசத்தில் கத்தாரியென்னும் பதித மதத்தைத் தழுவிய பெற்றோரிடமிருந்து பிறந்தார்.

இவரை இவர் தகப்பன் படிக்கும்படி ஒரு கத்தோலிக்கப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைத்தான்.

ஒரு நாள் இராயப்பருடைய உறவினர்களில் ஒருவன், நீ பள்ளியில் படித்ததை சொல்லென்ற போது இராயப்பர் விசுவாச மந்திரத்தைச் சொன்னார்.

அந்த மந்திரத்தை படிக்காதபடி அவரை அவரது வீட்டார் தடுத்தார்கள்.

இராயப்பர் பெரியதோர் நகருக்குச் சென்று கல்வி கற்று ஞானஸ்நானம் பெற்று அர்ச். தோமினிக் சபையில் சேர்ந்து உத்தம் துறவியாய் விளங்கினார்.

இவர் அடிக்கடி பக்தியுடன் ஜெபிப்பார். கடின தவமுயற்சிகளைச் செய்வார். மடத்தி லுள்ள தாழ்மையான வேலைகளைச் செய்வார்.

இவர் அநியாயமாய்க் குற்றஞ் சாட்டப்பட்டு சிரேஷ்டரால் தண்டிக்கப்பட்டபோது அதை மகா பொறுமையுடன் சகித்துக்கொண்டார்.

இராயப்பர் குருப்பட்டம் பெற்று பதிதர் மனந்திரும்பும்படி இடைவிடாமல் பிரயாசைப்பட்டு வந்ததினால் கணக்கில்லாத பதிதர் சத்திய வேதத்தில் சேர்ந்தார்கள்.

இவர் வீதியில் பிரசங்கிக்கும்போது, எவ்வளவு திரளான ஜனங்கள் அவர் பிரசங்கத்தைக் கேட்க வருவார்களென்றால், அவர் ஜனநெரிசலில் அகப்பட்டு துன்புறாதபடிக்கு அவர் அவ்விடத்தினின்று தூக்கப் பட்டு அப்புறப்படுத்தப்படுவார்.

இவர் ஒவ்வொரு ஊருக்கும் போகும்போது அவ்வூரார் இவரை வாத்திய இசையுடன் எதிர்கொண்டு, சுற்றுப்பிரகாரமாய் அவரை அழைத்துப் போவார்கள்.

பதிதரோ அவர் மட்டில் பகைகொண்டு, ஒரு நாள் அவர் தனியாகப் போகும்போது அவரைத் தாக்கி கொலை செய்தார்கள்.

இராயப்பர் வேதசாட்சி முடி பெற்றபின் அவரால் நடந்த அற்புதங்களைக் கண்ட பதிதர் கூட்டங் கூட்டமாய்ச் சத்திய வேதத்தில் சேர்ந்தார்கள்.

யோசனை 

பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் கத்தோலிக்கப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி அவர்கள் ஞானோபதேசம் கற்க முயற்சிப்பார்களாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். ராபர்ட், ம.
அர்ச். யூக், ம.
அர்ச். பியாக்னா , து.