சர்வேசுரனின் இரக்கத்தின் நவநாள் ஜெபங்கள்.

(சங் சகோதரி பவுஸ்தீனாவின் நாள் குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்டது.)

முதல் நாள்

மனுக்குலம் அனைத்திற்காகவும், குறிப்பாக எல்லாப் பாவிகளுக்காகவும்.

“இன்று மனுக்குலம் முழுவதையும் விசேஷமாய் எல்லாப் பாவிகளையும் என்னிடம் கூட்டி வந்து என் இரக்கக்கடலில் மூழ்க வை.  இவ்வாறு ஆன்மாக்களின் இழப்பினால் கடுந்துயரத்தில் ஆழ்ந்துள்ள எனக்கு ஆறுதலளிப்பாய்” என்றார் சேசு.

இரக்கமுள்ள சேசுவே! எங்களுக்கு இரக்கமும் மன்னிப்பும் அளிப்பவரே!  எமது பாவங்களைப் பாராமல், உமது அளவற்ற நன்மைத்தனத்தில் நாங்கள் கொண்டுள்ள எங்கள் நம்பிக்கையைப் பாரும்.  கருணை மிகுந்த உமது இதய இல்லத்தில் எங்களை ஏற்றுக் கொள்ளும். அதிலிருந்து நாங்கள் பிரிந்து போகவிடாதேயும். பிதாவோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும், உம்மைப் பிணைக்கும் உமது அன்பைக் குறித்து உம்மை இறைஞ்சுகிறோம்.

நித்திய பிதாவே!  சேசுவின் இரக்கம் நிறைந்த இருதயத்தில் ஒன்றுசேர்க்கப்பட்டுள்ள மனுக் குலத்தின் மீதும், விசே­மாய் பாவிகள் மீதும், உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். அவரது துயரம்நிறைந்த பாடுகளைப் பற்றி எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டும். நாங்கள் எல்லா வல்லமையுமுள்ள உமது இரக்கத்தை என்றென்றும் புகழ்வோமாக.  ஆமென்.

இரண்டாம் நாள்

குருக்கள், துறவிகளின் ஆன்மாக்களுக்காக.

“இன்று, குருக்கள், துறவியரின் ஆன்மாக் களை என்னிடம் அழைத்துவந்து ஆழங்காண முடியாத எனது இரக்கத்தில் மூழ்கவிடு.  எனது கசப்பான பாடுகளை நான் சகித்துக்கொள்ள எனக்குச் சக்தியளித்தவர்கள் இவர்கள்தாம்.      எனது இரக்கத்தின் வாய்க்கால்களாகிய இவர்கள் வழியாக மனுக்குலத்தின்மேல் என் இரக்கம் பாய்கிறது” என்றார் நமதாண்டவர்.

இரக்கம் மிகுந்த சேசுவே!  உம்மிடம் இருந்தே எல்லா நன்மையும் வருகின்றது.  நாங்கள் தகுந்த இரக்கச்செயல்களைப் புரிய எம்மில் உமது அருளைப் பெருக்கியருளும். அதனால் எம்மை நோக்கும்யாவரும் பரலோகத்திலுள்ள இரக்கத் தின் பிதாவைப் புகழ்வார்களாக!

நித்திய சீவியரான பிதாவே! உமது திராட்சைத் தோட்டத்திற்கென நீர் தெரிந்துள்ள உமது குருக்கள் துறவியரின் ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்ணைத் திருப்பியருளும். உமது ஆசீர்வாதத்தின் பலத்தால் அவர்களை நிரப்பும்.  உம் திருக்குமாரனின் இருதய அன்பிற்காக, அந்த அன்பில் ஒன்றுசேர்ந்துள்ள இவர்களுக்கு உமது வல்லமையையும், ஒளியையும் தாரும்.  இவர்கள் மீட்பின் பாதையில் பிறரை வழிநடத்தி உமது எல்லையற்ற இரக்கத்தை முடிவில்லாக் காலத்துக்கும் ஒரே குரலில் போற்றுவார்களாக! ஆமென்.

மூன்றாவது நாள்

விசுவாசிகள், பக்தியுள்ளவர்களின் ஆன்மாக் களுக்காக.

“இன்று பக்திப் பிரமாணிக்கமுள்ள அனைத்து ஆன்மாக்களையும் அழைத்துவந்து என் இரக்கச் சமுத்திரத்தில் மூழ்கவை.  என் சிலுவையின் பாதையில் இவர்கள் எனக்கு ஆறுதலாய் இருந் தார்கள்.  கசப்பான பெருங்கடலின் நடுவில் எனக் குக் கிடைத்த ஒரு துளி ஆறுதல் இவர்கள்தான்” என்றார் சேசு.

இரக்கம் மிகுந்த சேசுவே!  உமது இரக்கக் கருவூலத்திலிருந்து ஒவ்வொருவருக்கும் உமது அருளை ஏராளமாகப் பொழிகின்றீர்.  உமது இரக்கம் நிறைந்த இருதயமாகிய இல்லத்தில் எங்களை ஏற்றுக் கொள்ளும். அதிலிருந்து நாங்கள் பிரிந்துபோக விடாதேயும்.  பரமபிதாவிடம் நீர் கொண்டிருந்த, உமது உள்ளத்தைச் சுட்டெரித்த ஆச்சரியமான அன்பைக் குறித்து நாங்கள் இந்த வரப்பிரசாதத்தை உம்மிடம் மன்றாடுகிறோம்.

நித்திய பிதாவே! உமது திருக்குமாரனின் ஞான சரீரத்தின் அங்கங்களாகிய உமது விசுவாசிகள் மீது உமது இரக்கமுள்ள திருக்கண்களைத் திருப்பி யருளும்.  துன்பம் நிறைந்த அவரது திருப்பாடு களைப் பற்றி இவர்களுக்கு உமது ஆசீரை வழங்கி, உமது இடைவிடாத பராமரிப்பால் இவர்களை அரவணைத்துக்கொள்ளும்.  இதனால் இவர்கள் உம்மை நேசிப்பதில் ஒருபோதும் தவறாமல் பரிசுத்த விசுவாசமாகிய பொக்கி­த்தை ஒரு போதும் இழக்காமல் இருப்பார்களாக.  சம்மன சுக்கள் அர்ச்சியசிஷ்டவர்களோடு உமது எல்லையில்லா இரக்கத்தை நித்தியத்திற்கும் மகிமைப்படுத்துவார்களாக. ஆமென்.

நான்காம் நாள்

நாஸ்தீகர், கடவுளை அறியாத மக்களுக்காக.

“இன்று நாஸ்திகர்களையும், இன்னும் என்னை அறியாதவர்களையும் என்னிடம் கொண்டு வா. எனது கசப்பான பாடுகளின் போது இவர்களை யும் நான் நினைத்துக் கொண்டேன். என்னை அறிய வேண்டுமென்ற இவர்களது எதிர்கால ஆர்வம் என் இருதயத்துக்கு ஆறுதலாய் இருந்தது.  எனது இரக்கமாகிய மாபெரும் கடலில் இவர் களை ஆழ்த்திவிடு” என்றார் சேசு.

இரக்கம் நிறைந்த சேசுவே! நீரே உலகின் ஒளி.  உம்மை இன்னும் அறியாத நாஸ்திகர்களை உமது வரப்பிரசாதம் மிகுந்த உள்ளமாகிய இல்லத்தில் ஏற்றுக்கொள்ளும். உமது அருட்கதிர் அவர் களுக்கு ஒளி ஊட்டுவதாக! இவர்களும் எம்மோடு இணைந்து உமது அளவற்ற இரக்கத்தைப் போற்றி ஏற்றுக்கொள்வார்களாக!  உமது உள்ளமாகிய இல்லத்திலிருந்து இவர்கள் பிரிந்து போகாவண்ணம் பாதுகாப்பீராக!

நித்திய பிதாவே, இரக்கமிகுந்த சேசுவின் இருதயத்தில் வைக்கப்பட்டுள்ள நாஸ்திகர்மீதும் உம்மை இன்னும் அறியாதவர்கள்மீதும் உமது கருணைக் கண்ணைத் திருப்பியருளும். இவர் களை சுவிசே­த்தின் ஒளிக்கு இழுத்தருளும். உம்மை நேசிப்பது எத்துணை இன்பம் என்பதை இவர்கள் அறியார்கள். இவர்களும் உமது இரக்கத் தாராளத்தை ஊழிக்காலமும் வாழ்த்த வரமருள் வீராக!

ஐந்தாம் நாள்

வேதவிரோதிகள், பிரிவினைக்காரரின் ஆன்மாக்களுக்காக.

“இன்று பிரிந்துபோன சகோதரர்களின் ஆன்மாக் களைக் கொணர்ந்து என் இரக்கப் பெருங்கடலில் அமிழ்த்து.  எனது கசப்பான பாடுகளின்போது எனது உடலையும் உள்ளத்தையும் (அதாவது என் திருச்சபையை) இவர்கள் கிழித்தார்கள்.  திருச் சபையின் ஒற்றுமைக்கு இவர்கள் வந்து சேர்ந்தால் தான் என் காயங்கள் குணமாகும்.  இதன் வழியாக இவர்கள் எனது பாடுகளின் அகோரத்தைத் தணிப்பார்கள்” என்றார் சேசு.

இரக்கமிகுந்த சேசுவே!  நன்மையின் உருவே! உம்மிடம் ஒளியைத் தேடும் எவருக்கும் நீர் மறுத்ததில்லை.  பிரிந்துபோன எம் சகோதரர் களை இரக்கம் மிகுந்த உம் இருதய இல்லத்தில் ஏற்றுக் கொள்ளும். உமது ஒளியால் இவர்களைத் திருச்சபையின் ஒன்றிப்புக்கு இழுத்தருளும். உமது இரக்கத்தின் தாராளத்தை இவர்களும் புகழ வருவார்களாக!

நித்திய பிதாவே! பிரிந்துபோன எமது சகோதரர்களின் ஆன்மாக்கள் மீதும், விசே­மாய் தங்கள் தப்பறையில் பிடிவாதமாக ஊன்றிநின்று உமது வரப்பிரசாதத்தை விரயம்செய்து உமது ஆசீரை உதறிவிட்டவர்களின்மீதும், உமது கருணைக் கண்ணைத் திருப்பியருளும்.  இவர் களது குறைகளைப் பாராமல், உமது சொந்த குமாரனின் அன்பையும், இவர்களுக்காக அவர் அனுபவித்த கசப்பான பாடுகளையும் பார்த் தருளும்.  ஏனெனில் இவர்களும் சேசுவின் கருணை மிகுந்த இருதய இல்லத்தில் வைக்கப் பட்டுள்ளார்கள்.  ஊழிக்காலம் உமது பெரும் இரக்கத்தை இவர்களும் புகழ்ந்தேத்துவார்களாக! ஆமென்.

ஆறாவது நாள்

குழந்தைகள், தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள ஆன்மாக்களுக்காக

“இன்று சாந்தமும் தாழ்மையுமுள்ள ஆன்மாக் களையும் சிறு குழந்தைகளின் ஆன்மாக்களையும் என்னிடம் அழைத்து வா.  என் இரக்கத்தில் மூழ்க வை.  இவ்வான்மாக்கள் என் இருதயத்தை மிகவும் ஒத்திருக்கிறார்கள்.  எனது கசப்பான வேதனை யில் எனக்கு சக்தியளித்தார்கள். எனது பீடங்களின் அடியில் விழித்துக் காத்திருக்கும் உலக வானதூதர் களாக இவர்களைக் காண்கிறேன்.  இவர்கள் மேல் எனது அருளைப் பொழிகிறேன்.  தாழ்மையான ஆன்மாக்கள் மட்டுமே என் வரப்பிரசாதத்தைப் பெறமுடியும். இவர்கள் மட்டுமே என் நம்பிக் கைக்கு உரியவர்கள்” என்றார் சேசு.

இரக்கம் நிறை சேசுவே!  நான் சாந்தமும் இருதயத் தாழ்ச்சியும் உள்ளவன், என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்று நீர்தாமே சொல்லி இருக்கிறீர். சாந்தமும் தாழ்மையுமுள்ள ஆன்மாக் களையும், சிறு குழந்தைகளின் ஆன்மாக்களையும் இரக்கம் மிகுந்த உமது இருதய வீட்டில் ஏற்றுக் கொள்ளும்.

இவ்வான்மாக்கள் பரலோக பரவசத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.  இவர்கள் பரம பிதாவின் செல்லக் குழந்தைகள்.  சர்வேசுரனின் அரியா சனத்தின் முன் இவர்கள் மணம் வீசும் மலர்க் கொத்து ஆவார்கள். இவர்களது நறுமணத்தில் சர்வேசுரன் இன்பம் கொள்கிறார்.  இவர்களுக்கு இரக்கம் நிறைந்த சேசுவின் இதயத்தில் நிலையான இடமுண்டு.  இவர்கள் அன்பு இரக்கம் பற்றிய பாடல்களை இடையறாது பாடுகிறார்கள்.

நித்திய பிதாவே! சாந்தம் உள்ள ஆன்மாக்கள், தாழ்மையுள்ள ஆன்மாக்கள், குழந்தைகள் இவர்கள்மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும்.  இவர்கள் சேசுவின் இரக்கம் மிகுந்த இருதய வீட்டில் ஒன்றுசேர்ந்துள்ளார்கள். இவர்கள் உமது திருக்குமாரனின் சாயலை மிகவும் ஒத்திருக்கிறார்கள்.  இவ்வான்மாக்களின் நறுமணம் மண்ணுலகிலிருந்து எழுந்து உமது அரியணையை அடைகின்றது. எல்லா நன்மைக்கும் இரக்கத்திற்கும் தந்தையே!  இந்த ஆன்மாக்கள் மட்டில் உமக்குள்ள அன்பையும் மகிழ்ச்சியையும் குறித்து நான் வேண்டுகிறேன்.  உலக முழுவதையும் ஆசீர்வதியும். எல்லா ஆன்மாக் களும் ஒன்றுசேர்ந்து, உமது இரக்கத்தை முடிவில் லாக் காலம் புகழ்ந்தேத்துவார்களாக! ஆமென்.

ஏழாம் நாள்

சர்வேசுரனின் இரக்கத்தை சிறப்பாக மகிமைப்படுத்தி, வணங்கும் ஆன்மாக்களுக்காக.

“இன்று எனது இரக்கத்தைச் சிறப்பாக மகிமைப் படுத்தி வணங்கும் ஆன்மாக்களை அழைத்து வந்து என் இரக்கத்தில் மூழ்கச் செய்.  இவ்வான்மாக்கள் எனது பாடுகளை எண்ணி, வருந்தி என் ஆன்மா வோடு ஆழ்ந்து ஒன்றிக்கிறார்கள்.  எனது இரக்கமுள்ள இருதயத்தின் உயிருள்ள சாயல்கள் இவர்கள்.  இவ்வான்மாக்கள் மறுவாழ்வில் விசே­ ஒளி யோடு பிரகாசிப்பார்கள். இவர்களில் ஒருவரும் நரக நெருப்பில் விழ மாட்டார்கள். இவர்களின் மரண வேளையில் அவர்களை நான் பாதுகாப் பேன்” என்றார் சேசு.

அன்பையே இருதயமாகக் கொண்ட இரக்க மிகுந்த சேசுவே! உமது இரக்கத்தின் உயர்வைச் சிறப்பாகப் போற்றி வணங்கும் ஆன்மாக்களை உம் இரக்கமிகுந்த இருதய இல்லத்தில் ஏற்றுக் கொள்ளும்.  சர்வேசுரனின் வல்லமையைக் கொண்டு இவர்கள் வலிமை பெறுகிறார்கள்.  இவர்கள் துன்பங்கள் இடைஞ்சல்களுக்கு நடுவே கடவுளின் இரக்கத்தில் முன்னேறிச் செல்பவர்கள்.  இவ்வான்மாக்கள் மனுக்குலம் முழுவதையும் தங்கள் தோள்களில் சேசுவோடு இணைந்து சுமந்து செல்கின்றார்கள். இவர்கள் கடுமையாகத் தீர்வை யிடப்படமாட்டார்கள்.  இவ்வுலகை விட்டுப் பிரியும்போது உமது இரக்கம் இவர்களை அணைத்துச் செல்லும்.

நித்திய பிதாவே! உமது மிகச் சிறந்த இயல்பாகிய ஆழங்காணமுடியாத இரக்கத்தைப் போற்றி வணங்கும் ஆன்மாக்கள் மீது, உமது கருணைக் கண்ணைத் திருப்பியருளும்.  சேசுவின் கருணை நிறைந்த இருதயத்தில் இவர்கள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் சுவிசேஷத் தின்படி வாழ்பவர்கள். இவர்களின் கரங்கள் இரக்கத்தின் செயல்களால் நிரம்பியவை. மகிழ்ச்சி பொங்கிவழியும் இவர்கள் இருதயம், உன்னத ராகிய உமக்கு இரக்கத்தின் கீதத்தை இசைக்கும்.  சர்வேசுரா!  உம்மை வேண்டுகிறேன்.  இவர்கள் உம்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு அளவாக இவர்களுக்கு உமது இரக்கத்தைக் காண்பியும்.  ஆழங்காண முடியாத உமது இரக்கத்தை வணங்கும் ஆன்மாக்களை, வாழ்விலும் முக்கியமாக கடைசி வேளையிலும், “என் சொந்த மகிமை எனக் கருதிப் பாதுகாப்பேன்” என்று சேசுவே கூறிய அந்த வாக்குறுதி நிறைவேறுமாக! ஆமென்.

எட்டாம் நாள்

உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காக.

“இன்று உத்தரிக்கும் ஸ்தலமாகிய சிறைக் கூடத்தில் உள்ள ஆன்மாக்களைக் கூட்டி வந்து என் இரக்கத்தின் ஆழத்தில் அமிழ்த்து.  என் இரக்கம் இவர்களைச் சுட்டெரிக்கும் தீப்பிழம்புகளைக் குளிரச் செய்யட்டும்.  இவ்வான்மாக்கள் அனை வரும் என்னால் அதிகம் நேசிக்கப்படுகிறார்கள்.  என் நீதிக்கு பரிகாரம் செய்கிறார்கள்.  இவர் களுக்கு விடுதலை அளிப்பது உன் கையில் இருக் கிறது.  எனது திருச்சபையின் பொக்கி­த்தினின்று எல்லாப் பலன்களையும் எடுத்து இவர்களுக்காக ஒப்புக்கொடு. இவர்கள் அனுபவிக்கும் வேதனை களை நீ அறிவாயானால், இடைவிடாது அர்ப் பணித்து எனது நீதிக்கு இவர்கள் செலுத்த வேண்டிய கடனைத் தீர்ப்பாய்” என்றார் சேசு.

இரக்கம் நிறைந்த சேசுவே! நீர் இரக்கத்தையே விரும்புவதாக நீரே மொழிந்தீர். எனவே இரக்க மிகுந்த உமது இருதய இல்லத்தினுள்ளே உத்தரிக் கிற ஆன்மாக்களை அழைத்து வருகிறேன். அவர்கள் உமது அன்பர்கள்.  ஆயினும் உமது நீதிக்கு உத்தரிக்க வேண்டியவர்கள்.  உமது இருதயத் திலிருந்து பீறிட்டுவரும் இரத்தமும் நீருமாகிய அருவிகள் இவர்களைச் சுத்திகரித்து அனற்பிழம்பு களை அணைக்கட்டும்.  இவ்விடத்திலும் உமது இரக்கத்தின் வல்லமை கொண்டாடப்படட்டும்.

நித்திய பிதாவே!  உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்படும் ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்ணைத் திருப்பியருளும். அவர்கள் இரக்கம் நிறைந்த சேசுவின் இருதயத்தில் ஒன்று சேர்க்கப் பட்டுள்ளார்கள்.  உமது திருக்குமாரன் சேசுவின் வேதனை நிறைந்துள்ள பாடுகளைக் குறித்தும், அவரது திரு இருதயத்தின் துயரத்தைக் குறித்தும் உம்மை மன்றாடுகிறோம். உமது நீதியின் தீர்ப்பில் நிற்கும் இவ்வான்மாக்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டியருளும்.  உமது நேச குமாரன் சேசுவின் திருக்காயங்கள் வழியாக இவர்களை நோக்கும். உமது நன்மைத்தனத்திற்கும், இரக்கத்திற்கும் எல்லையேயில்லை என்று நாங்கள் உறுதியாக விசுவசிக்கிறோம்.  ஆமென்.

ஒன்பதாம் நாள்

வெதுவெதுப்புள்ள ஆன்மாக்களுக்காக.

“இன்று வெதுவெதுப்புள்ள ஆன்மாக்களை என்னிடம் அழைத்து வந்து, எனது இரக்கத்தின் ஆழத்தில் மூழ்க விடு.  இவ்வான்மாக்கள் எனது உள்ளத்தை மிகவும் நோகச் செய்கிறார்கள்.  இந்த வெதுவெதுப்புள்ள ஆன்மாக்களாலேயே நான் ஜெத்சமனிப் பூங்காவில் பயங்கர வேதனைகள் அனுபவித்தேன். அவ்விடத்தில், பிதாவே, உமக்கு சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னை விட்டு அகலட்டும் என்று நான் கூறியதற்குக் காரணம் இவர்கள்தாம்.  இவர்களுக்கு என் இரக்கத்தை நோக்கி ஓடி வருவது ஒன்றுதான் மீட்பின் கடைசி நம்பிக்கை” என்றார் நமதாண்டவர்.

மிகவும் இரக்கமுள்ள சேசுவே! நீர் கருணையே வடிவானவர்.  கருணை மிகுந்த உமது இருதய வீட்டில் இந்த வெதுவெதுப்புள்ள ஆன்மாக்களை அழைத்து வருகிறேன்.  உம்மை இத்தனை துயரத் தில் ஆழ்த்திய நடைப்பிணம் போன்ற, பக்தியற்ற இவ்வான்மாக்களின் உள்ளங்களை, உமது தூய அன்பின் அக்கினி, மறுபடியும் கொழுந்து விட்டு எரியச் செய்வதாக.  கருணை மிகுந்த சேசுவே, உமது இரக்கத்தின் வல்லமையைப் பயன்படுத்தி, உமது அன்பின் அனலுக்குள் இவர்களை இழுத்து, புனித அன்பாகிய கொடையை இவர்களுக்கு அருள்வீராக.  உமது வல்லமைக்கு அப்பாற் பட்டது எதுவுமேயில்லை..

நித்திய பிதாவே!  கனிவு மிக்க சேசுவின் இருதயத்தில் கூட்டிச் சேர்க்கப்பட்டுள்ள இந்த வெதுவெதுப்புள்ள ஆன்மாக்கள்மீது உமது கருணைக் கண்ணைத் திருப்பியருளும்.  இரக்கத்தின் தந்தாய்! உமது திருக்குமாரனின் கசப்பான பாடுகளைப்பற்றியும், சிலுவையில் மூன்று மணி நேரமாக அவர் அனுபவித்த கடின மரண வேதனையைப் பற்றியும் உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.  இவர்களும் உமது எல்லையற்ற இரக்கத்தை மகிமைப்படுத்துவார்களாக. 

ஆமென்.