அனுகூலமடைய ஜெபம்

ஓ! பரிசுத்ததனத்தின் வெண்மையான லீலி மலரே! உன்னத தரித்திரத்தின் முன்மாதிரிகையே! மெய்யான தாழ்ச்சியின் கண்ணாடியே!  பரிசுத்ததனத்தின் ஒளிவிடும் நட்சத்திரமே! ஓ மகிமையில் துலங்கும் அர்ச். அந்தோனியாரே! தேவரீர் உமது திருக்கரங்களில் தேவ பாலனான சேசுநாதர் எழுந்தருளி வரும் விசேஷித்த சுதந்தரம் பெற்று அகமகிழ்ந்தீரல்லோ? அதுபோல வல்லமையுள்ள உம் ஆதரவில் என்னையும் வைத்துக் காப்பாற்ற வேணுமென்று உம்மை மன்றாடுகிறேன். ஆண்டவரால் நீர் பெற்றுக் கொண்ட வரங்களில் புதுமை செய்யும் வரமே உம்மிடத்தில் முக்கியமாய்ப் பிரகாசிக்கிறதல்லோ!  தேவரீர் என் பேரில் இரங்கி எனக்கு அவசரமான இந்த விஷயத்தில் எனக்கு உதவி செய்ய வாரும். (இன்னின்ன)... அக்கிரமமான ஆசைப்பற்றுதலையெல்லாம் என் இருதயத்தினின்று நீக்கி அதை சுத்திகரித்தருளும். என் பாவங்களுக்காக நான் மெய்யான மனஸ்தாபப்படவும், ஆண்டவரையும் அயலாரையும் உருக்கமாய் நேசித்து வரவும் எனக்கு வேண்டிய வரத்தை அடைந்தருளும்.  இவ்விதமாக நான் இம்மையில் ஆண்டவரைப் பிரமாணிக்கமாய்ச் சேவித்து மறுமையில் உம்மோடு அவரை நித்தியமாய்த் தரிசித்துப் போற்றிப் புகழ்ந்து வாழ்த்தக் கடவேனாக.

ஆமென்.