அர்ச். அந்தோனியாரின் புண்ணிய தலங்களில் சொல்லத்தகும் ஜெபம்

இப்புண்ணிய சேத்திரத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனம் கொண்டு எழுந்தருளியிருக்கிற அர்ச். அந்தோனி யாரே!  பரிசுத்ததனம் விளங்கும் லீலியே!   விலை மதிக்கப்படாத மாணிக்கமே!  பரலோக பூலோக காவலே!  கஸ்தி துன்பப்படுகிறவர்களுக்குப் பரம சஞ்சீவியானவரே, பாவிகளின் தஞ்சமே!  உமது இன்பமான சன்னிதானம் தேடி வந்தோம்.  உமது திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.  மகா சிரவணம் பொருந்திய அர்ச். அந்தோனியாரே! சூரத்தனமுள்ள மேய்ப்பரே!  பசாசுகளை மிரட்டி ஓட்டுபவரே! திருச்சபையின் கருணையின் கண்ணாடியானவரே!  உலகில் எங்கள் ஆதரவும் நீரல்லவோ!  எங்கள் சந்தோ­மும் நம்பிக்கையும் பாக்கியமும் நீரல்லவோ!  நீர் எங்கள் ஞானத் தந்தை என்பதை எங்களுக்குக் காண்பியும்.  பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர் பாராட்டுவார்களோ?  உம்மைத் தேடிவந்த நிர்ப் பாக்கியர் பேரில் தயவாயிரும். அழுகிற பேர்களை அரவணையும்.  அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுத லாக வாரும்.  நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்?  நீர் ஆதரியாவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்?  நீர் நினையா விட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவு வார்? தஞ்சமென்று ஓடி வந்த அடியோர்கள் பேரில் தயவாயிரும்.  பரிசுத்த வெண்மையின் துய்யதான தாபரமே!  தயைக் கடலே! தவிப்பவர் களுக்குத் தடாகமே! தனித்தவருக்குத் தஞ்சமே! உமது இன்பமான சன்னிதானம் தேடி வந்தோம்.  ஆறு, காடுகளைக் கடந்து ஓடி வந்தோம்.  துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம்.  எங்கள் நம்பிக்கை வீண் போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் யாத்திரைகள் பலனற்றதாய்ப் போகுமோ?  எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ? அப்படி ஆகுமோ?  ஐயா, எங்கள் அன்பனான தகப்பனே! எங்களை முழுவதும் ஒப்புக்கொடுக்கிறோம்.  எங்களைக் கையேற்றுக்கொண்டு ஆசீர்வதித்தருளும்.  ஆமென்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி!  அர்ச். அந்தோனியாரை  வணங்கி அவருடைய சலுகையை இரந்தும் சாஷ் டாங்கமாக விழுந்து கிடக்கிற யாத்திரிகளாகிய அடியோர்கள் பேரில் தயை செய்தருள வேணு மென்று உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட் டுகளையயல்லாம் எங்கள் ஆண்டவரான சேசுநாத ருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். 

ஆமென் சேசு.