சேசுநாதருடைய திரு இரத்தத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

நித்திய பிதாவின் ஏக சுதனாகிய கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மனிதவதாரம் எடுத்த தேவ வார்த்தையான கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

புதிய நித்திய ஏற்பாட்டினுடைய கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இரத்த வேர்வை வேர்த்தபோது தரையில் வழிந்தோடிய கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

கற்றூணில் கசையால் அடிபட்டபோது சொரிந்தோடிய கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

முள்முடி சூட்டப்பட்டபோது வெளியான கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சிலுவையில் சிந்தப்பட்ட கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எங்களுடைய இரட்சணியத்தின் கிரயமான கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பாவ மன்னிப்புக்கு அத்தியாவசியமான கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

திவ்விய நற்கருணையில் பானமாயிருப்பதும் ஆத்துமங்களைக் கழுவுகிறதுமான கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இரக்கத்தின் நீரோட்டமான கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பசாசுக்களை வெல்லும் கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

வேதசாட்சிகளின் திடமான கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஸ்துதியர்களுடைய பலமான கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

கன்னியர்களைப் பிறப்பிக்கிற கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஆபத்தில் சிக்கித் தவிப்போர்க்கு தெம்பான கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உழைப்பை எளிதாக்குகிற கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அழுகையில் ஆறுதலளிக்கும் கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மனஸ்தாபப்படுவோரின் நம்பிக்கையான கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மரிப்போரின் ஆறுதலான கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயங்களின் சமாதானமும் இனிமையு மான கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

நித்திய சீவியத்தின் அச்சாரமான கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து ஆத்துமங்களை விடுவிக்கிற கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எல்லா மகிமைக்கும் சங்கைக்கும் முற்றிலும் தகுதிவாய்ந்த கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

ஆண்டவரே, உமது திரு இரத்தத்தால் எங்களை இரட்சித்தீர். சர்வேசுரனுடைய இராச்சியமாக எங்களை ஏற்படுத்தினீர்.

பிரார்த்திக்கக்கடவோம்.

சர்வ வல்லவரும் நித்தியருமாயிருக்கிற சர்வேசுரா, உமது ஏக குமாரனை உலக இரட்சகராக நியமித்து அவரது இரத்தத்தால் சாந்தமடைய திருவுளமானீரே. எங்கள் இரட்சணியத்தின் கிரயமாகிற அந்தத் திரு இரத்தத்தை வணங்கவும் அதன் வல்லமையால் இவ்வுலக வாழ்வின் தீமைகளிலிருந்து பாதுகாக்கப்படவும் அதனால் பரலோகத்தில் நித்திய சம்பாவனையைப் பெற்று மகிழவும் எங்களுக்கு அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.  எங்கள் ஆண்டவராகிய அதே கிறீஸ்து வழியாக இதை எங்களுக்குத் தந்தருளும்.  

ஆமென்.