சகோதரி பவுஸ்தீனாவுக்கு சேசு கற்பித்த இரக்கத்தின் ஜெபமாலை

ஜெபமாலை பாடுபட்ட சுரூபத்தில்:

பரலோக மந்திரம். அருள் நிறை மந்திரம். விசுவாசப் பிரமாணம் சொல்லவும்

ஜெபமாலை பெரிய மணியில்:

நித்திய பிதாவே!  உம்முடைய திருக்குமார னும் எங்கள் ஆண்டவரும் இரட்சகருமாயிருக்கிற சேசு கிறீஸ்துவின் திருச்சரீரத்தையும் இரத்தத்தை யும் ஆத்துமத்தையும் தெய்வீகத்தையும் எங்கள் பாவங்களுக்கும் உலகத்தார் அனைவரின் பாவங்களுக்கும் பரிகாரமாக ஒப்புக்கொடுக்கிறேன்.

சிறிய மணிகளில்:

சேசுவின் மிகத் துயரமான பாடுகளைக் குறித்து, எங்கள் பேரிலும் உலகத்தார் அனைவர் பேரிலும் இரக்கமாயிரும் (10 தடவைகள் சொல்லவும்).

53 மணிகளின் முடிவில்:

பரிசுத்தரான சர்வேசுரா!  பரிசுத்தரான எல்லாம் வல்லவரே!  பரிசுத்தரான நித்தியரே! எங்கள் பேரிலும் உலகத்தார் அனைவர் பேரிலும் இரக்கமாயிரும். (3 விசை)