அர்ச்சியசிஷ்ட அந்தோனியார் மீது செய்யுள் (தொகையறா)

தூத்துக்குடி ஆயர்ரோச் ஆண்டகை சே.ச.அவர்களின் அனுமதி பெற்ற தொகையறா.

மூவா முதல்வனைப் போற்றி மலர் தூவுகின்றோம்.
தந்தையைச் சிரம் தாழ்த்தி பணிந்து தூவுகின்றோம்.
தூய ஆவியை ஆராதித்து மலர் தூவுகின்றோம்.
திருக்குமாரன் இயேசுவை நெஞ்சாரப் பணிந்து மலர் தூவுகின்றோம்.
பாதத்தில் பேயை நசுக்கிய தேவதாய்
மரி அன்னையைப் பணிந்து மலர் தூவுகின்றோம்.
எரி நரகில் சாத்தானை வீழ்த்திய
தூய மிக்கேல் அடி பணிந்து மலர் தூவுகின்றோம்.
வான் தூதர்களை வணங்கி மலர் தூவுகின்றோம்.
ஸ்நாபக அருளப்பர் சகல தூயவர்களை வணங்கி மலர் தூவுகின்றோம்.
திருச்சிலுவையை ஆராதித்து மலர் தூவுகின்றோம்.
எட்டுத் திக்கும் ஈரெட்டுத் திக்கும் துஸ்டப்பேய்
பயந்தோடி பயந்தோடி எரி நரகில் வீழ்ந்திடவே
தூய அந்தோனி மாமுனியே உம்
இணையடி பணிந்து மலர் தூவுகின்றோம்.
(மலர் தூவுகின்றோம் எனும் போது மலர் தூவவும்)
சங்கீத ஏட்டினை எடுத்துச் சென்ற.. மறையோனை
இங்கிதமாகக் கரை சேர்த்து அலகையை ஓட்டி
மங்காப்புகழ் பெற்ற சந்தந்தோனி மாமுனியே!
எங்கட்கு என்றும் ஆதரவளித்து அருள் புரிவாயே!