உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமங்கள் நவநாட்களில் ஒவ்வொரு நாளும் சொல்லும் செபம்.

ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும். என் அபயசத்தம் உமது சந்நிதி மட்டும் வரக்கடவது.

என் சிருஷ்டிகரும், சகல விசுவாசிகளினுடையவும் இரட்சகருமாகிய சர்வேசுரா, உமது ஊழியர்களும், அடிமைகளுமானவர்களின் ஆத்துமங்களின் சகல பாவங்களையும் மன்னித்தருளும். இவ்வாறு, எங்கள் பக்தியுள்ள மன்றாட்டுக்களின் வழியாக, அவர்கள் எப்போதும் ஆசித்து வந்திருக்கிற மன்னிப்பைப் பெற்றுக்கொள்வார்களாக. ஜீவியரும். சதாகாலமும் இராச்சியபாரம் பண்ணுகிறவருமாயிருக்கிற ஆண்டவரே.

ஆமென்.