உத்தம மனஸ்தாப மந்திரம்.

சர்வேசுரா சுவாமி! தேவரீர் அளவில்லாத சகல நன்மையையும் கிருபையும் நிறைந்தவராகையால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழு மனதோடு நேசிக்கிறேன் . இப்படிப்பட்ட தேவரீருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம் நொந்து மெத்த மனஸ்தாபப்படுகிறேன். எனக்கிதுவே மனஸ்தாபமில்லாமல் வேறே மனஸ்தாபமில்லை. எனக்கிதுவே துக்கமில்லாமல் வேறே துக்கமில்லை. இனிமேல் ஒருபொழுதும் இப்பேர்ப்பட்ட பாவங்களைச் செய்வதில்லைஎன்று உறுதியான மனதுடனே பிரதிக்னை செய்கிறேன் . மேலும் எனக்குப் பலன் போதாமையால் ஏசுநாதர் சுவாமி பாடுபட்டுச் சிந்தின திரு இரத்தத்தைப் பார்த்து என் பாவங்களை எல்லாம் பொறுத்து எனக்கு உம்முடைய வரப்ப்ரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருளுவீரென்று முழு மனதோடு நம்பி இருக்கிறேன். திருச்சபை விசுவசித்துக் கற்பிக்கிற சத்தியங்களை எல்லாம் தேவரீர் தாமே அறிவித்திருப்பதால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன்.

ஆமென்.