⛪ உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆத்துமங்களுக்காக ஜெபம்.

திவ்விய சேசுவே, உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும். தாவீது அரசனின் புத்திரனாகிய சேசுவே, சிலுவைப் பாரத்தால் அதிகரித்த உமது திருக்காயங்களின் கொடிய வேதனைகளைப் பார்த்து, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும். சுவாமி, தேவரீர் அன்று சிலுவை பீடத்தில் பலியாகும் போது பச்சாதாபக் கள்ளனுக்கு கிருபை புரிந்துதுபோல்,  இந்த ஆத்துமங்களின் பேரில் இரக்கமாயிருந்து  அவர்களை உமது பிரத்தியட்ச தரிசனையி்ன் பாக்கியத்தில் சேர்த்தருளும். அங்கே சகல அர்ச்சியசிஷ்டவர்களோடேயும், சம்மனசுக்களோடேயும் அவர்கள் சதா சர்வகாலமும்  தேவரீரை வாழ்த்தி ஸ்துதித்துக் கொண்டிருப்பார்களாக. ஆமென்.

உன்னதத்தில் வீற்றிருக்கிற எங்கள் பிதாவே! உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்படும் ஆத்துமங்களுக்காக திவ்விய சேசுக்கிறீஸ்துவின் விலைமதியாத திரு இரத்தத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். சுவாமி! பரிசுத்தரே, சர்வ வல்லப பரிசுத்தரே, அட்சயரான பரிசுத்தரே சுவாமி! எங்கள் மேல் இரக்கமாயிரும். பாவிகளுக்குப் பொறுத்தலைத் தந்தருளும். மரித்த சகல விசுவாசிகளுக்கும் நித்திய இளைப்பாற்றியைக் கட்டளையிட்டருளும். ஆமென்.

(நாள் 1-க்கு 300 நாள் பலன்)