⛪ சிந்தாயாத்திரை மாதா பிரார்த்தனை!

சுவாமி கிருபையாயிரும்!
கிறிஸ்துவே கிருபையாயிரும்!
சுவாமி கிருபையாயிரும்!

கிறிஸ்துவே! எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்!
கிறிஸ்துவே! எங்கள் பிரார்த்தனையைக் நன்றாகக் கேட்டருளும்!

பரமண்டலங்களிலே இருக்கின்ற பிதாவாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!

பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!

பரிசுத்த திரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி, இரட்சியும் சுவாமி!

அர்ச்சியசிஷ்ட மரியாயே!

சீவியர்களுடைய மாதாவாகிய

திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

பரலோக ரோஜா நந்தவனமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

உம்மை நம்பினவர்களுக்கு ஞானச் சீவிய ஊற்றான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

செயமடைவதற்குத் திருவிருதான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

ஞானத்தின் சாயலான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

செபதியானத்தின் திரு ஆலயமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

அடைக்கலப் பேழையான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

உம்மை நம்பினவர்களுக்குத் துணையான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

எருசலேமின் மகிமைக் கிரீடமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

விடியற்காலையின் நட்சத்திரமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

சந்திரனைப் போல நிறைந்த அழகுள்ளவளான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

சூரியனைப் போல் பிரகாசிக்கின்றவளான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

சமுத்திரத்தின் நட்சத்திரமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

சகல தீவினைகளிலேயும் நின்று, எங்களை இரட்சிக்க மன்றாடுகிற திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

எரிந்தும் வேகாத முள்மரமாக மோசேஸ் கண்ட திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

சாலமோன் என்கிறவருடைய பத்திராசனமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

தங்கமயமாயிலங்கும் உப்பரிகையான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

பசித்திருக்கிறவர்களுடைய ஜீவனமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

வேதம் அடங்கிய பெட்டகமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

முத்திரையிடப்பட்ட ஊற்றான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

பஞ்சம் படை நோய்களிலே ஆதரவான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

சீவியஞ்சுரக்கும் கிணறான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

அலைகடலில் திசை தப்பித் தேறுதலில்லாமல் திகைப்பவர்களுக்கு நல்வழியும் கரையுமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

கப்பலேறித் தேசாந்திரியாயிருக்கிறவர்களை கைதூக்கி இரட்சித்துக் கொண்டு வருகிற திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

பரதேசமாகிய இவ்வுலகமெனும் ஆழியில் நின்ற ஆத்துமாக்களுக்குப் பரலோகக் கரையை காண்பிக்கும் வெளிச்ச வீடாகிய திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

ஏழைகளுக்கு இரங்கும் தாயாரான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

உத்தரிப்பு ஸ்தலத்திலே இருக்கிற தாயாரான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

உத்தரிப்பு ஸ்தலத்திலே இருக்கிற ஆத்துமாக்களுக்கு இளைபாற்றியான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

பராபரனின் பூஜ்ஜிய தேவாலயமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

யாக்கோபு் என்பவர் கண்ட ஏணியான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

சகல புண்ணியங்களிலும் ஞானப் கண்ணாடியான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

சூரியனை ஆடையாய்த் தரி;த்த பரம ஸ்தீரியான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

சந்திரனைப் பாதக் குடறாக அணிந்த தயாபரியான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

தெய்வீகத்தின் ஞானக்சுடராய் விளங்குகின்ற திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

உம்மை மன்றாடுகிறவர்களுக்கு அடைக்கல அன்னையான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்கள் பாவங்களை பொறுத்தருளும் சுவாமி!

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்கள் பிரார்த்தனையை தயவாய் கேட்டருளும், சுவாமி!

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி!

இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பேறுபெற்றவர்களாக இருக்கத் தக்கதாக, திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக,
நித்திய பிதாவாகிய சர்வேசுரா, முத்திப்பேறு பெற்ற பரிசுத்த கன்னி மரியாயைக் குறித்து மன்றாடுகிற நாங்கள் அந்த உத்தம நாயகியின் வேண்டுதலினால் இந்தப் பரதேசயாத்திரையில் நேரிடுஞ் சகல ஆபத்துக்களிலும் நின்று காக்கப்பட்டு, சத்திய சன்மார்க்கத்திலே தவறுதலின்றி நடந்து நன்மரணத்தையும் நித்திய மோட்சானந்த பாக்கியத்தையும் கண்டடைய அனுக்கிரகம் பண்ணியருளும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்துக் தந்தருளும். ஆமென்.