தேவமாதாவின் கண்ணீரின் ஜெபமாலை

(மாதா உலகில் இருக்கும்போதும், பல்வேறு காட்சிகளிலும், மற்றும் சுரூபங்களிலும் சிந்தும் கண்ணீர்களுக்குப் பரிகாரமாக)

ஜெபமாலையின் பாடுபட்ட சுரூபத்தில்:

சிலுவையில் அறையப்பட்ட சேசுவே!  உமது  பாதத்தடியில் சாஷ்டாங்கமாக விழுந்து, உமது துயரம் நிறைந்த சிலுவைப் பாதையில் அனுதாப வேதனையுடன் உம்மைப் பின்சென்ற உம் தாயின் கண்ணீர்களை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.  நல்லவரான ஆண்டவரே!  உம் மிகப் புனித அன்னையின் கண்ணீர்கள் எங்களுக்குத் தரும் பாடங்களை நாங்கள் எங்கள் இருதயத்தில் ஏற்றுக் கொண்டு, அதனால் பூவுலகில் உமது திருச் சித்தத்தை நிறைவேற்றவும்,மோட்சத்தில் நித்தியத் திற்கும் உம்மைப் புகழ்ந்து துதிக்கவும் தகுதி பெற்றவர்களாகும்படி செய்தருள்வீராக. ‡ ஆமென்.

பெரிய மணிகளில்:

ஓ சேசுவே! நீர் உலகத்தி லிருக்கும்போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நிய மாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக.

சிறிய மணிகளில்:

சேசுவே,, உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (இப்படி ஏழு விசை சொல்லவும்)

ஏழு மணி ஜெபத்திற்குரிய ஏழு மன்றாட்டுக்கள்

1. சேசுவே! ஓர் வாள் உம் இருதயத்தை ஊடுருவும் என்ற சிமையோனின் தீர்க்கதரிசனத் தைக் கேட்டு உமது மாதா சிந்திய கண்ணீர்களைப் பார்த்து எங்கள் துயர வேளைகளில் நாங்கள் விசுவாசத்திலும் உமது அன்பிலும் உறுதியோ டிருக்கக் கிருபை செய்வீராக.

2. சேசுவே!  உமது மாதா எஜிப்துக்கு ஓடிப் போனபோது சிந்திய கண்ணீர்களைப் பார்த்து எல்லா அகதிகள் மேலும், விசுவாசத்திற்காக உபத் திரவ வேதனைகளை அனுபவிக்கிறவர்கள் மேலும் இரக்கமாயிருப்பீராக!

3. சேசுவே!  மூன்று நாளாக உம்மைக் காணாமல் உமது தாய் தேடியலைந்தபோது சிந்திய கண்ணீர்களைப் பார்த்து, உம்மை இழந்து விட்ட ஆன்மாக்கள் மீண்டும் உம்மைக் கண்டடைய கிருபை செய்வீராக.

4. சேசுவே! உம்முடைய வேதனை நிறைந்த சிலுவையின் பாதையில் நீர் நடந்து சென்றபோது உமது தாய் சிந்திய கண்ணீர்களைப் பார்த்து, நோயாலும், துன்ப துரிதங்களாலும் நாங்கள் வருந்தும்போது எங்களுக்கு ஆதரவாயிருந்து, தப்பறை களில் விழுகிறவர்களின் வழியும், உயிரும் உண்மையும் நீரே என்பதை அவர்களுக்குக் காட்டி யருள்வீராக.

5. சேசுவே! நீர் சிலுவையிலே தொங்கி மரண அவஸ்தைப்படும்போது உமது மாதா வடித்த கண்ணீர்களைப் பார்த்து, மரண அவஸ்தையா யிருக்கிறவர்கள் மேல் இரக்கமாயிருந்து, நாங்கள் எங்கள் மரணத்தை உமது கரங்களிலிருந்து அன்போடு ஏற்றுக்கொள்ள கிருபை செய்வீராக.

6. சேசுவே! நீர் சிலுவையிலிருந்து இறக்கப் பட்டு மாதாவின் மடியில் வளர்த்தப்பட்டபோது, அத்தாய் சிந்திய கண்ணீர்களைப் பார்த்து, துன்ப வேதனைப்படுகிறவர்கள்மேல் இரக்கமாயிரும்.  அவர்களின் சக்திக்கு அதிகமான துன்பங்களை சர்வேசுரன் அனுமதிக்க மாட்டீர் என்ற உண்மையை அவர்கள் உணரச்செய்தருளும்.

7. சேசுவே!  நீர் கல்லறையிலே அடக்கம் செய்யப்பட்டபோது உமது மாதா சிந்திய கண்ணீர்களைப் பார்த்து நாங்கள் உம்மிலே உயிர்ப்போம் என்ற நம்பிக்கையால், மரண பயத்தை மேற்கொள்ள கிருபை செய்வீராக.  இந்நாட்களில் உம் சுரூபங்கள் சொரியும் கண்ணீர்களுக்குப் பரிகாரமாக எங்கள் துன்பங்களையும் எங்கள் அன்பையும் ஏற்றுக் கொள்வீராக.

கண்ணீர் ஜெபமாலையை “கிருபைதயாபத்து” மந்திரத்தைச் சொல்லி முடிக்கவும்.)