அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரின் அழியா நாவுக்கு செபம்.

பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே! நீர் உமது நாவால் எப்போதும் இறைவனை துதித்ததுமன்றி எப்போதும் துதிக்கப்படவும் செய்தீரே! நான் உமது புண்ணியங்களை எல்லாங் கண்டு பாவிப்பதுமல்லாமல் விசேஷமாய் எந்தப் பாவத்தினாலும் என் நாவை கறைப்படுத்தாமலும், உம்மைப்போல் அதைக் கொண்டு எப்போதும் இறைவனைத் துதித்தும், துதிக்கச் செய்தும் வருவேனென்று உமக்கு வாக்களிக்கிறேன். நான் என் நாவால் கட்டிக் கொண்டதும், கட்டிக் கொள்ளச் செய்ததுமான எல்லா பாவங்களுக்கும் மன்னிப்பையும், இனி எப்போதைக்கும் இறைவனை துதிக்கவும். பிறருக்கு நன்மாதிரி கொடுக்கவும் மாத்திரம் நாவை உதவிக் கொள்ளும் வரத்தையும், உமது கரங்களில் ஏந்தியிருக்கிற தேவபாலனை மன்றாடி அடைந்தருளும்படி உம்மை மன்றாடுகிறேன்.

ஆமென்.