அர்ச்சியசிஷ்ட பொம்பே மாதாவுக்கு 4வது மன்றாட்டு

நிர்ப்பாக்கியருக்குச் சகாயமும், ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலமும், துன்பப்படுவோர்க்குத் தேற்றரவுமாயிருக்கிற உம்மையல்லா நான் வேறே யாரையடுத்துப் போவேன்?

என்னாத்துமமோ நிர்ப்பாக்கியமானதுமாய், கொடிய பாவச் சேற்றில் அமிழ்ந்தினதுமாய் நரகாக்கினைக்கும் பாத்திரமும், உமது வரப்பிரசாதங்களுக்கு அபாத்திரமானதுமாய் இருக்கிறது மெய்தான் என்று ஒத்துக்கொள்கிறேன்.

ஆயினும், நம்பிக்கையற்றவர்களின் நம்பிக்கையும் , மானிடருக்கும் கடவுளுக்குமிடையில் மகா மத்தியஸ்தம் செய்பவரும், சர்வ உன்னத சர்வேசுரனின் சிம்மாசனத்துக்கு முன்னின்று எங்களுக்காக வெகு பலத்தோடு பரிந்து பேசுபவரும் பாவிகளுக்கு அடைக்கலமும் நீரல்லவோ?

நீர் உமது திருக்குமாரனிடத்தில் எனக்காக ஒரு வார்த்தை மாத்திரம் திருவுளம் பற்றியருளுவிரேயாகில் உமது மன்றாட்டை அவர் கேட்டருளுவார்,

ஓ! என் தாயாரே! இதோ! எனக்கு எவ்வளவோ அவசியமாயிருக்கிற இவ் வரப்பிரசாதத்தைப் பெற்றுத் தந்தருளும்.

(வேண்டுதலை விசுவாச உறுதியோடு சொல்லவும்)

ஆண்டவளே! நீர் மாத்திரமே அடியேனுக்கு பெற்றருளக் கூடியவள். நீரே என் ஏக நம்பிக்கை. நீரே என் ஆறுதல். நீரே என் மதுரம். நீரே என் பூரண ஜீவியம். நான் நம்பிக் காத்திருக்குமாப் போல் ஆகக்கடவது.

(கிருபை தயாபத்து ஜெபம்)

ஆமென்.