அர்ச்சியசிஷ்ட பொம்பே மாதாவுக்கு 3-வது மன்றாட்டு.

ஓ! என் தாயாரே! எத்தனையோ பேர் நம்பிக்கையோடு உம்மையண்டி வந்ததினால் உமது உதவி சகாயங்களைப் பெற்றுக் கொண்டார்களென்று கேள்விப்படும் போது, உமது ஆதரவை இரந்து மன்றாடும் அடியேனுக்கு விசேஷ தைரியமும் துணிவும் உண்டாகக் காண்கிறேன்.

எவ்வித வரப்பிரசாதங்களையும் அடைய விரும்புவோர்கள், உமது மகா பரிசுத்த ஜெபமாலை வழியாய் அடையலாமென, புனிதசாமி நாதருக்கு வாக்குத்தத்தம் செய்தருளினீர். ஆதலால், நானும் இதோ உமது ஜெபமாலையைக் கையிலேந்தி, தாய் தேசத்துக்குரிய விபத்து தப்பாட்டை நிறைவேற்றும்படி உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

பொம்பே என்னும் ஸ்தலத்தில் உமக்கோர் ஆலயத்தைக் கட்டுவிக்க உமது மக்களையும் ஏவும் பொருட்டு எத்தனையோ அற்புதங்களை நீர் இன்று வரையும் செய்து வருகிறீர்!

ஆதலால், நீர் எங்கள் கண்ணீரைத் துடைக்கவும், கவலைகளையாற்றவும் சித்தமுடைத்தானவராயிருக்கிறீரெனக் கண்டு, என் இருதயத்தை முழுதும் உமக்குத் திறந்து, உயிருள்ள விசுவாசத்தோடு உம்மை நோக்கி என் தாயாரே! அழகு செளந்தரியமுடைத்தான மாதாவே! மகா மதுரம் பொருந்திய மாதாவே! என்று உம்மை நோக்கிக் கூப்பிட்டு ,எனக்கு உதவி செய்ய மன்றாடுகிறேன்.

அர்ச்சியசிஷ்ட செபமாலை இராக்கினியும் தாயுமானவளே, நீர் தாமதிப்பீராகில் நான் தவறி மோசம் போய் விடுவேன் என்பதை அறிவீர். ஆதலால், சற்றும் தாமதியாமல் உமது வல்லபமுள்ள கரத்தை நீட்டி என்னை இரட்சித்தருளும்.

(கிருபை தயாபத்து ஜெபம்)

ஆமென்.