அன்பெனும் வீணையிலே நல் ஆனந்தக் குரலினிலே ஆலய மேடையிலே உன் அருளினைப் பாடிடுவேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அன்பெனும் வீணையிலே நல் ஆனந்தக் குரலினிலே

ஆலய மேடையிலே உன் அருளினைப் பாடிடுவேன்


1. அகமெனும் கோவிலிலே என் தெய்வமாய் நீ இருப்பாய்

அன்பெனும் விளக்கேற்றி உன் அடியினை வணங்கிடுவேன்


2. வாழ்வெனும் சோலையிலே நல் தென்றலாய் நீ இருப்பாய்

தூய்மையென்னும் மலரை நான் தாள்மலர் படைத்திடுவேன்


3. தென்றலே கமழ்ந்திடுமே என் தெய்வமே நீயிருக்க

இன்பமே மலர்ந்திடுமே நான் உன்னில் வாழ்ந்திருக்க