ஒரு கணமும் எனைப் பிரியாமல் என்னோடு தங்கும் ஆண்டவரே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஒரு கணமும் எனைப் பிரியாமல் என்னோடு தங்கும் ஆண்டவரே

உம்மை நான் பிரிந்து சென்றாலும்

என்னோடு தங்கும் ஆண்டவரே

என்னோடு தங்கும் என்னோடு தங்கும்

என்னோடு தங்கும் ஆண்டவரே


1. நீர் இல்லை என்றால் வாழ்வினில் எழுச்சி இல்லை

எனை நீர் பிரிந்தால் இருளினில் வாடுகின்றேன்

பொழுது சாய்கின்றது இந்த நாளும் முடிகின்றது

வழியிலே சோர்ந்து விழுந்திடாமல்

எனது ஆற்றலைப் புதுப்பித்திட


2. என்னில் நீர் இருந்தால் வலிமை பிறக்கின்றது

உமது அருளால் துன்பங்கள் மறைகின்றது

உம் தெய்வீக ஆறுதலால் என்னை பலப்படுத்தும்

என் முழு உள்ளத்தினால்

உம்மையே நான் தினம் நேசித்திட