தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா சேயாக நம்பி வந்தேன் வாழ்வில் ஒளியேற்ற வா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா

சேயாக நம்பி வந்தேன் வாழ்வில் ஒளியேற்ற வா

கொஞ்சும் தமிழ் மொழி பேசி எனைத் தேற்றவே

பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா


1. உன் அன்புச் சாரலில் நனைந்தாலே போதும் இன்னல்கள் நீங்கிடுமே

உன் சுவாசக் காற்றில் கலந்தாலே போதும்

விண்வாசல் அடைந்திடுவேன்

நான் என்றும் உன் சாயல்தானே

உன் கோவில் குடிகொள்ள நீ வா


2. உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும்

சுகராகம் மீட்டிடுவேன்

உன் வார்த்தைக் கடலில் மிதந்தாலே போதும்

யுகம் பல படைத்திடுவேன்

எல்லாமே நீதானே இறைவா

என் உள்ள நிறைவாக நீ வா