இயேசுவே என் இராஜனே வாழ்வை வழங்க வந்தாய் தேவனே என் தெய்வீகனே வார்த்தை உலகில் வந்தாய்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசுவே என் இராஜனே வாழ்வை வழங்க வந்தாய்

தேவனே என் தெய்வீகனே வார்த்தை உலகில் வந்தாய்


1. மன்னாவை உண்டார்கள் மடிந்தார்கள் - அத்

தண்ணீரைப் பருகியவன் தாகங்கொண்டான்

இயேசுவே என்னை உண்பவன் வாழ்வடைவான்

என்னிடம் வருபவன் தாகம் கொள்ளான்

என்று சொன்னதால் நான் வந்தேன்

நீர் தந்ததால் வாழ்வைக் கண்டேன்

வாழ்வைப் பகிர்ந்தளிப்பேன்


2. வானமும் பூமியும் அழிந்துவிடும் - இறை

வார்த்தையோ ஒருநாளும் அழியாது

இயேசுவே தன்னை உயர்த்துவோன் தாழ்வடைவான்

தன்னைத் தாழ்த்துவோன் உயர்வடைவான்

என்று சொன்னதால் நான் வந்தேன்

நீர் வாழ்ந்ததால் அன்பைக் கண்டேன்

அன்பாய் வாழ்ந்திடுவேன்