அப்பத்தில் வாழும் தேவனே நெஞ்சில் வாருமே மண்ணோர்க்கு மீட்பு ஈந்தவா பீடம் தன்னில் வந்தாய்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அப்பத்தில் வாழும் தேவனே நெஞ்சில் வாருமே

மண்ணோர்க்கு மீட்பு ஈந்தவா பீடம் தன்னில் வந்தாய்

விண்ணகம் நின்று மண்ணகம் வந்த ராஜ ராஜனே


1. எம்மோடு ஒன்றி வாழவே உண்ணும் உணவானாய்

அருளின் வாழ்வில் நிலைத்து வாழும் பாதை காட்டினாய்


2. பாவிக்கு மோட்சம் நல்கவே பாவி உருவானாய்

பாவத்தில் வாழும் மாந்தரின் உள்ளம் புனிதமாக்குவாய்