பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (2)

சொந்தம் பந்தமுமெல்லாம் நீயே எனச் சொல்லி வந்தேன்

எந்தையும் என் தாயும் நீயன்றோ - நீயே

என்னையாளும் மன்னவனன்றோ


1. நிலையில்லா உலகினில் நிலைத்து நான் வாழ என்

நிம்மதி இழந்து நின்றேன்

வளமில்லா வாழ்வினில் வசந்தங்கள் தேடி நான்

அளவில்லா பாவம் செய்தேன்

தனது இன்னுயிரைப் பலியெனத் தந்தவரே

உனக்கு நான் எதையளிப்பேன்? - இன்று

உனக்கு நான் எனையளித்தேன்


2. வறுமையும் ஏழ்மையும் பசியும் பிணியும்

ஒழிந்திட உழைத்திடுவேன்

அமைதியும் நீதியும் அன்பும் அறமும்

நிலைத்திட பணி செய்வேன்

உன்னத தேவனே உமதருட்கருவியாய்

உலகினில் வாழ்ந்திடுவேன் - என்றும்

உன்னிலே வாழ்ந்திடுவேன்