தந்தாய் நாங்கள் வந்தோம் உம் பாதம் காணிக்கை தந்தோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தந்தாய் நாங்கள் வந்தோம்

உம் பாதம் காணிக்கை தந்தோம் -2

ஏற்றிடுவீர் மாற்றிடுவீர் வாழ்வுகள் மலர அருள்புரிவீர் -2


1. கல்வாரி மலைமீது சிலுவை நம் பாவப்பரிகார முழுமை

எவ்வாறு சுமப்போம் பளுவை என்பவன் சுயநலத்தின் அடிமை

ஓ இயேசுவே எம் அன்பினை காணிக்கையாகத் தந்தோம்

ஓ தேவனே எம் வாழ்வினை அர்ப்பணம் செய்திட வந்தோம் -2


2. ஏழ்மையில் வாழ்ந்திடும் சிலுவை ஏளனப் பொருளாகும் நிலைமை

எவ்வாறு மாற்றுவது இதனை என்பதே வாழ்க்கையின் கடமை

ஓ இயேசுவே பணிவாழ்வினைக் காணிக்கையாகத் தந்தோம்

ஓ தேவனே உம் தோள்களின் சிலுவையைச் சுமந்திட வந்தோம்

அர்ப்பணம் செய்திட வந்தோம்