தன்னை வழங்கும் தலைவன் தந்த விருந்திது இந்த தரணி மாந்தர் வாழ நல்ல மருந்திது

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தன்னை வழங்கும் தலைவன் தந்த விருந்திது - இந்த

தரணி மாந்தர் வாழ நல்ல மருந்திது (2)

உள்ளங்களில் ஆட்சி செய்ய வந்தது நாளும்

உண்மையின் சாட்சியாக அழைக்குது


1. அவல நிலையில் உள்ளோர்க்கு அமைதி தரும் - இது

உரிமை இழந்த மனிதருக்கு சக்தி தரும் (2)

அன்பு நீதி நேர்மையுள்ள ஆட்சியைத் தேடும் - 2 நம்

உள்ளத்தில் உறைந்து உணர்வினில் கலந்திட


2. காலந்தோறும் கண்ணிமை போல் நம்மைக் காக்கும் - இது

கறைகள் நிறைந்த இதயத்தினைத் தேடிவரும் (2)

மனித நேயம் மானிடர் காண ஏங்கிடும் - 2 நம்

மனக்கவலைகளை மகிழ்ச்சியால் நிறைத்திட