செந்தமிழ் நாதனே தேன்சிந்தும் நாதமே என்னில் எழுந்து வா என்னை ஆள வா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


செந்தமிழ் நாதனே தேன்சிந்தும் நாதமே

என்னில் எழுந்து வா என்னை ஆள வா

முகிலாக மழையாக மழை தந்த வளமாக

மனமெங்கும் மணந்து வா என் உயிரோடு கலந்து வா


1. இளங்காலை வானம் குயில் பாடும் கானம்

இவை காணும் நெஞ்சம் உன்பாதம் தஞ்சம் (2)

இமை மூடினும் உனைத் தேடிடும் விழியொன்று தா - 2


2. வாழ்வில் நீ தந்த வசந்தங்கள் கோடி

வாழ்வே நீ என்றும் உன் அன்பைப் பாடி (2)

உயிர் நீங்கிடும் உனை நாடிடும் உறவொன்று தா - 2