செந்தமிழில் உந்தன் புகழ் எழுதி நான் பாடிடுவேன் இறைவா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


செந்தமிழில் உந்தன் புகழ் எழுதி - நான்

பாடிடுவேன் இறைவா என் சிந்தனையில் நீ இருந்து வாழ

எழுந்தருள்வாய் தலைவா என்னில் எழுந்தருள்வாய் தலைவா


1. உன் உடல் உயிர்த்ததுன் வல்லமையால்

உலகினர் உயிர்ப்பதுன் வல்லமையால் (2)

என்னுடல் உயிருடன் வாழ்ந்திடவே -2

இறைமகனே இன்று எழுந்தருள்வாய் -2


2. உன்னுயிர்த் தியாகம் புரிந்ததனால்

மண்ணுயிர் தினமும் மகிழ்கின்றது (2)

என்னுயிர் மெழுகாய்க் கரைவதனால் -2

என்னுயிர் காத்திட எழுந்தருள்வாய் -2