சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 73

என் இருதய இரக்கம் வற்றாதது

என் இருதயத்தின் இரக்கம் வற்றாதது என்று நான் சிறப்பான விதத்தில் கற்பிக்க ஆசைப்படுகிறேன். எரியும் சுவாலை போல் நான் அவர்களை நேசத்தால் பற்றி எரியச் செய்வேன் என்று மனச்சோர்வு கொண்டவர்கள் அறியட்டும். பக்தியும் பரிசுத்தத்தனமும் கொண்டுள்ள ஆத்துமங்களுக்கு நான் வழியாய் இருக்க விரும்புகிறேன். புனிதத்தின் பாதையில் அவர்கள் விரைந்து சென்று நித்திய பாக்கியம் தரும் துறைமுகத்தில் பத்திரமாய் சேர்வார்கள். என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட குருக்கள், துறவிகள் போன்றவர்களிடமிருந்து அவர்களுடைய அன்பை நான் இன்னொரு முறை கேட்கிறேன். எனது அன்பைப் பற்றி அவர்கள் ஒருபோதும் சந்தேகம் கொள்ளக்கூடாது. முக்கியமாக அவர்கள் என்னில் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

தாங்கள் ஒன்றுமில்லாதவர்கள், பலவீனர்கள் என்பதால் அவர்களுடைய ஆத்துமங்களில் நான் முதலில் செயல்படுகிறேன் என மக்கள் கண்டறியும்படிச் செய்வேன். நான் நித்தியத்திலிருந்தே தயாரிக்கும் நேசத்தின் முதல் தொடர் அங்கு தொடங்குகிறது.

நேசத்திலும் மன்னிப்பிலும் என்னுடைய இருதயம் எவ்வளவு தூரம் செல்லக் கூடும் என ஆத்துமங்கள் அறியச் செய்வேன். என்னை மகிழ்ச்சிப்படுத்த, தேற்ற, மகிமைப்படுத்த அவர்களுக்குள்ள ஆசையை நான் கண்டுணர்வேன். ஆனால் அவர்கள் பலவீனத்தினால் தவறிய பின், தாழ்ச்சியுடன் தங்கள் குற்றங்களை ஏற்றுக் கொள்வார்களானால் என் இருதயத்தை மகிமைப்படுத்துகிறார்கள், தேற்றுகிறார்கள். அவர்களுடைய சிறுமையை நான் பொருட்படுத்துவதில்லை. அவர்களிடம் குறைவாக உள்ள எல்லாவற்றையும் நான் சரிப்படுத்த முடியாதா?

உயிரிழந்திருக்கும் பெரும்பாலான ஆத்துமங்களுக்கு உயிர் கொடுக்கும்படி அவர்களுடைய பலவீனத்தை நான் பயன்படுத்துகிறேன்.

தவறிப்போன ஆத்துமங்களின்மேல் நான் கொண்டுள்ள இரக்கத்துக்கும் நேசத்துக்கும் அளவு கிடையாது. மன்னிக்க நான் ஆசையாய் இருக்கிறேன். மன்னிப்பது எனது ஆனந்தம். அவர்களுடைய வரவை நான் எப்போதும் எதிர்பார்த்து நிற்கிறேன். எதுவும் அவர்களை அதைரியத்துக்கு உள்ளாக்கக் கூடாது. அவர்கள் செய்ய வேண்டியது சகல பாவத்தையும் அகற்றி தங்களை என் கரங்களில் வைத்து விடுவதே; நான் அவர்களுடைய தந்தையல்லவா?

ஆத்துமங்களை, வெகு சிறப்பாக அவர்களுக்கு உண்மை வாழ்வு கொடுக்க எனக்கு இருக்கும் ஆசையை அறியாது இருளில் இருக்கும் ஆத்துமங்களை, என்னிடம் கொண்டு வருவதில் தாங்கள் செய்யக் கூடிய உதவிகளை சிலர் தக்க விதமாக அறிவதில்லை.

தொடரும்...