என் ஆன்மா எந்நாளுமே ஆண்டவரை ஏற்றி ஏற்றிப் போற்றுகின்றது

என் ஆன்மா எந்நாளுமே
ஆண்டவரை ஏற்றி ஏற்றிப் போற்றுகின்றது
என் மீட்பரை நினைத்து நினைத்து
எந்தன் நெஞ்சம் மகிழுகின்றது

1. ஏழைகளை எளியவரை உயர்த்தினார் - பல
இன்னல்படும் உள்ளங்களைத் தேற்றினார்
செல்வரை வெறுங்கையராய் அனுப்பினார் - நெஞ்சில்
செருக்குற்ற மனிதரையே சிதறடித்தார்

2. அடிமைகளை அன்புடனே நோக்கினார் - அவர்
ஆள்பவரின் ஆணவத்தை நீக்கினார்
தாழ்ந்தோரை மேன்மையாக உயர்த்தினார் - வாழ்வில்
வீழ்ந்தோரைக் கருணையினால் ஆதரித்தார்