எம் தாய் எம் தாய் எம் தாய் ஏதமில் கன்னித்தாய்

எம் தாய் எம் தாய் எம் தாய்
ஏதமில் கன்னித்தாய்
நின் தாள் தந்தாதரி எம் தாய்
நிகரில் நிமல தாய்
வந்தோம் உன்றன் மைந் தரிதோ
மான் பார் உன் தஞ்சமே
மன் தாவி தென்பார் கோத்ரியே
மாக்ரூபை நேத்ரியே

1. ஓ தாய் மாமரியே உன்னத மோட்ச இராஜேஸ்வரியே
ஓ தாய் மாமரியே உன் மகவை யீரந் தாதரியே

2. சாலோ மேர்னாலயி தாரகைச் சிரத்தி
மாலான பாவத்தில் வீழ்ந்தே மனம் பரிதபித்தே

3. நோயன்றன் பேழையே நோயுற்றார்க் கின்பமே
பேயின் அந்த்ரமா மாயையில் பெரிதும் அயர்வுற்றே

4. சர் வேஸ்வரன் மாதாவே தண்ணலைவான் மீனே
துர் வாஞ்சை நீங்குதற்கின்றே துணை செய்குவை யென்றே