பனிமயத் தாயின் பக்தர்களே நீங்கள் இறைவனை வேண்டிடுங்கள்

பனிமயத் தாயின் பக்தர்களே - நீங்கள்
இறைவனை வேண்டிடுங்கள்
இடைவிடாது சகாயம் புரியும் - அந்த
அன்னையைக் கேளுங்கள்

1. தெய்வீகக் கலைஞனின் பெரும்படைப்பாம் - அவள்
தெய்வத்தின் சந்நிதி ஒளிவிளக்காம்
பரமனின் உள்ளம் வாழ்பவள் நீயே
மண்ணகம் வாழ்வோர் முதற்கனி நீயே

2. முத்துமா நகரின் அணிகலன் நீயே
விரும்பிய விண்ணக நிறையருள் தாயே
நொந்திடும் உள்ளங்கள் எல்லாமே வருக
இறைவனின் சொல்லிலே நிம்மதி பெறவே