இறைவா என் இறைவா நீரே என் ஒளியும் மீட்பும் ***

இறைவா என் இறைவா நீரே என் ஒளியும் மீட்பும்
யாரைக் கண்டும் பயப்படேன் - இனி

1. தீயவர் என்னை எதிர்க்கையில் அவரே இடறி விழுவார்
எனக்கெதிராய் என்ன நேர்ந்தாலும்
என் உள்ளம் அஞ்சாது
நான் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்வேன்
யாரைக் கண்டும் பயப்படேன் - இனி

2. துன்பம் வரும் நாளில் என்னைக் கூடாரத்தில் மறைப்பார்
எதிரிகள் நடுவில் என்னை
பாதுகாப்பாய் வாழச் செய்வார்
நான் வாழ்வோரின் நாட்டில் நலன்களைக் காண்பேன்
யாரைக் கண்டும் பயப்படேன் - இனி