இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 7-ம் தேதி.

இயேசுவின் திருஇருதயம் தாழ்ச்சிக்கு ஆசிரியர்.

இயேசுவின் திருஇருதயப் பக்தியானது நமது ஆண்டவருடைய புண்ணியங்களைப் பின்பற்றி நம்முடைய அன்பை அவருக்குக் காண்பிப்பதில் அடங்கியிருக்கிறது. இந்தப் புண்ணியங்களுக்குள்ளே தாழ்ச்சியென்கிற புண்ணியத்தை விசேஷமாய் நமது ஆண்டவர் கற்பிக்கிறார். தீர்ப்பு நாளில் சோதோமுக்கு கிடைக்கும் தண்டனையை விட உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத்தேயு 11:24)

ஆண்டவருடைய அளவில்லாத மாட்சிமையையும் நமது ஒன்றுமில்லமையையும் நாம் அவர் பேரில் முற்றும் சார்ந்திருக்கிறோமென்பதையும் அங்கீகரிப்பதே தாழ்ச்சிக்கு அடித்தளம். ஆத்தும், சரீர விஷயங்களில் நாம் எவ்வித நன்மைகளை கொண்டிருந்தா லும், அல்லது நாம் எவ்வளவு சீரும் செல்வமும் உடையவர்களாயிருந்தா லும் அவைகளெல்லாம் நமது ஆண்டவர் நமக்கு தயவாய்க் கொடுக்கும் கொடைகளேயன்றி வேறல்ல. இந்த நற்கொடைகளை எப்படி உபயோகித்தோமென்று நாம் கண்டிப்பாக கணக்குக் கொடுக்கும் படியாயிருக்கும். இவையெல்லாம் ஆண்டவரிடமிருந்து நமக்கு வருகின்றன. எல்லாம் அவருக்கே சொந்தம். நமது பாவங்கள் நமது குற்றங்குறைகள் இவைகள் தான் நம்மிடமிருந்து வருபவை. நமது கண்ணுக்கு முன்னால் எப்போதும் இருக்கவேண்டிய உண்மை இது.

நாம் எவ்வளவு வசதி படைத்தவராயிருந்தாலும் எவ்வளவு நற்குணங்கள் அமைந்தவர்களாயிருந்தாலும் மனிதர்கள் நம்மைப் புகழ்ந்து பாராட்டினாலும் நாம் பெருமைப்படுவதற்குப் பதிலாய், சகல கொடைகளுக்கும் ஊற்றாகிய இறைவனுக்கு எல்லாப் புகழ்ச்சி வணக்கங்களும் உரியவை என்று எண்ண வேண்டும். ஆதலால் மற்றவர்களைவிட இறைவன் நமக்கு அதிகம் கொடுத்திருந்தால் அவருக்கு நன்றியும் வணக்கமும் செய்து, நமது அயலார்மட்டில் மிகுந்த மரியாதையோடு நடந்து கொள்ள வேண்டும்.

"தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப் பெறுவர் (மத்தேயு 23 : 12).

தாழ்ச்சி எவ்வளவு முக்கியமென்றால் எல்லா புண்ணியங்களுக்கும் அது அடித்தளமாயிருக்கிறது. வேரில்லாத மரம் ஒரு சிறு காற்று அடித்ததும் கீழே விழுகிறது போல், தாழ்ச்சியில்லாமல் மற்றெந்தப் புண்ணியமும் நிலைத்திருக்க மாட்டாது. தாழ்ச்சியானது விண்ணுலகில் நுழைய அவசியம் என்கிறார் புனித கிரகோரியார். ஆங்காரம் மற்றும் சுயநலம் போல் வேறெதுவும் ஆத்துமத்தை நித்திய அழிவுக்கு கொண்டு போகிறது இல்லை என்று தூய கிறிசோஸ்தோம் அருளப்பர் சொல்லுகிறார். தாழ்ச்சியுள்ளவர்களுக்குத் தமது அருட்கொடையை அளிக்கிறார் என்கிறார் புனித யாகப்பர்.

தாழ்ச்சி புனிதர்களுக்கு மட்டும்தான் என்றும் சாதாரண கிறிஸ்தவர்களுக்கு தேவையில்லை என்பதும் தவறு. ஆத்தும் மீட்புக்கு எல்லா கிறிஸ்தவர்களுக்கும் தாழ்ச்சி அவசியம் என்பதை மறந்து போகக்கூடாது. தாழ்ச்சி யென்கிற புண்ணியந்தான் நமக்கு இரட்சண்யமாகும். இதுதான் நம்முடைய துர்க்குணங்களோடு நாம் எதிர்த்துப் போராடவும், நம்முடைய பாவ அக்கிரமங்களினிமித்தம் நாம் தண்டனைக்கும், நிந்தை அவமானங்களுக்கும் உரியவர்கள் என்பதை ஞாபகப்படுத்தவும் உதவும்.

இயேசு தமது வார்த்தையைவிட தமது முன்மாதிரிகையால் தாழ்ச்சியென்கிற புண்ணியத்தைக் காண்பிக்கும் பொருட்டு தமது தேவ மகத்துவத்துக்குச் சரியான புகழுடன் இவ்வுலகில் வந்து தோன்ற சம்மதிக்கவில்லை. பெத்லகேம் ஊரிலுள்ள ஓர் எளிய மாட்டுக் கொட்டிலைத் தெரிந்துகொண்டார்.

திருப்பாடுகளின் போதுதான் இயேசுவின் திருஇருதயமானது தாழ்ச்சியென்னும் புண்ணியத்தில் மிகவும் வியக்கத்தக்க முன்மாதிரிகையை நமக்குக் காட்டுகிறது. நிந்தை அவமானங்களால் நிரப்பப்பட்டு, மிக்க கேவலமான சிலுவையின் சாவுக்குத் தீர்வையிடப்பட்ட திவ்விய இயேசு இந்த வேதனைகளை எல்லாம் மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டு மிகுந்த அன்போடு தமது தேவ பிதாவுக்கு அவைகளை ஒப்புக்கொடுத்தார். திவ்விய இயேசு நாம் நமது மகிமையைத் தேடுகிறதில்லை என்று உச்சரித்த தமது தெய்வீக வார்த்தையின்படி தமது ஆயுள் காலமெல்லாம் நடந்து வந்தார். நாமும் இப்படிச் சொல்லக்கூடுமா? நம் மாமனிதர்கள் தக்க விதமாய் மதிக்கவில்லையென்று நாம் உணரும் போதும், நம்முடைய வீண் பெருமையை குத்துவதற்கான வார்த்தைகள் நமது காதில் விழும்போதும், நாம் திவ்விய இயேசுவின் அன்புக்குரிய ஆச்சரியமான பொறுமையைப் பற்றுகிறோமா?

தாழ்ச்சிக்கு திவ்விய மாதிரிகையான இயேசுவை நாம் பின்பற்ற நமக்குத் தைரியமில்லையென்று உணர்ந்தால், நாம் நமது பேரில் கொள்ளும் மோசமான எண்ணங்களை சில செபங்களாக இயேசுவின் திரு இருதயத்துக்கு ஒப்புக் கொடுக்கலாம். கடைசியாய் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் நமது சுயமகிமைக்காகவும் மனித புகழ்ச்சிக்காகவும் உழைக்கிறதற்குப் பதிலாய் மோட்ச மகிமைக்காக உழைப்போமாக.

வரலாறு.

இயேசுவின் திரு இருதயப் பக்தி நாளுக்குநாள் வளர்ச்சியடைகிறதையும், அத்தகு இருதயத்துக்கு புகழ்ச்சியாகப் புதுத் தேவாலயங்கள் கட்டப்படுகிறதையும் நாம் பார்க்கும் போது நமக்கு இது மிக சந்தோசம் வருவிக்க வேண்டும். தென்னிந்தியாவில் ஓர் அழகான பெரிய தேவாலயம் இந்தியாவின் மீட்புக்காக மன்றாடும் இயேசுவின் திருஇருதயத்துக்கு புகழ்ச்சியாகக் கட்டப்பட்டு புனிதப்படுத்தப்பட்டது. மிக்க விலையுயர்ந்த இயேசுவின் திருஇருதய சுருபத்தை ஆபரணமாகக் கொண்டிருக்கிற இந்த ஆலயமானது நகரின் தலை வாசலில் ஒரு அழகிய குன்றின் மேல் நிற்கிறது. வானளாவிய இந்த உயர்ந்த சிம்மாசனத்தின் மீது வீற்றிருக்கும் இயேசுவின் திரு இருதயமானது தமது தெய்வீக கொடையை சுற்று வட்டாரத்திலுள்ள கிராமங்கள் மீதும் இன்னும் தென்னிந்தியாவின் மற்றெல்லா மாநிலங்களின் மீதும் பொழிந்து வருகிறது.

இயேசுவின் திருஇருதயப் பக்தர்களும் மரியன்னையின் மக்களாகிய பல திருயாத்திரைக்காரர்களும் இந்த புனிதப் படுத்தப்பட்ட இடத்தை அடிக்கடி சந்திக்க வருகிறார்கள். புனித மரியன்னை மோட்சத்திற்குக் கொண்டு போகப்பட்ட திருவிழாவுக்கு முந்தின நாள் இரவில் திருயாத்திரைக்காரர்கள் தேவ தாயாருடைய தேவாலயத்தை விட்டு கொடைக்கானல் பட்டணத்தின் வீதி வழியே செபம் செய்து கொண்டு தூரத்திலுள்ள இயேசுவின் திருஇருதய ஆலயத்துக்கு மெதுவாய் நடந்து பொழுது விடியுமுன் போய் சேருகிறார்கள். திருயாத்திரை ஸ்தலம் போய்ச் சேர்ந்ததும், தங்கள் வேண்டுதல்களையும் காணிக்கைகளையும் திரு இருதயத்துக்கு ஒப்புக்கொடுத்து, அங்கே நடக்கிற ஆடம்பர திருப்பலியில் கலந்து ஒப்புக் கொடுத்து தேவநற்கருணை உட்கொள்கிறார்கள்.

எந்தெந்த இடங்களில் தமது திரு இருதயத்துக்கு வணக்கம் புரிவார்களோ அந்தந்த இடங்களில் தமது ஏராளமான அருட்கொடைகளைப் பொழிவதாக இயேசுவின் திருஇருதயம் தூய மார்கரீத் மரியாவுக்கு வாக்குறுதி கொடுத்தது போல் கொடைக்கானல் பட்டணத்திலும் இந்த வாக்குறுதி நிறைவேறி வருகிறது. இந்த ஆலயம் திரு இருதயத்துக்குத் தோத்திரமாகக் கட்டி முடிந்த சில வருடங்களுக்குள்ளாக இந்தப் பட்டணத்தில் வருடா வருடம் பலர் மனந்திரும்புவதையும், பிற மதத்தினர் இருளில் மூழ்கி பிறமதங்களைச் சேர்ந்த குடும்பங்கள் மீட்புப் பாதைக்கு வந்து சேருகிறதையும் பார்க்கிறவர்களுடைய மனம் சந்தோஷத்தால் பூரித்து ஆறுதலடைகிறது. இந்தியாவின் மீட்புக்காக மன்றாடும் இயேசுவின் திரு இருதயத்துக்காகக் கட்டப்பட்ட இந்தப் பக்தி அழகு நிறைந்த ஆலயத்தில் போய் வேண்டிக்கொள்ளுகிற திருயாத்திரைக்காரர்கள் வழியாய் திருஇருதயமானது தமது ஆசீர்வாதத்தை அவர்கள் வசிக்கிற ஊர்களிலெல்லாம் பொழியுமென்பது உறுதி.

செயல்.

நீ செய்யும் நன்மைகளால் உனக்கு வரும் பலனை இழந்து போகாதபடி நீ செய்கிற புண்ணியத்தை வேறு நபர் அறியாமல் செய்.

சேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்

“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே!  தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன்?  தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன்?  சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன்?  ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே!  தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே.  சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம்  பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே!  தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.  ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல.  உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும்.  என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.

இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே.  தேவரீர்  வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.  நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.

சேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கி­மான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா!  உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.  உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும்  அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.