இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 4-ம் தேதி.

இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 4-ம் தேதி.

இயேசுவின் திருஇருதயமும், பரிசுத்த தேவ நற்கருணையும்.

இயேசுகிறிஸ்து திரு இருதய அன்பினால் ஏவப்பட்டு நமது ஆத்துமங்களுக்கு உணவாகவும், உயிராகவும் மீட்பாகவும் இருக்கும்படி நம்மோடுகூட தூய தேவநற்கருணையில் வீற்றிருக்க ஆவல் கொண்டார். நமது மீட்பருடைய தூய உடலை நாம் இந்த நற்கருணையில் ஆராதித்து அன்பு செய்கிறோம். இயேசுவின் திருஇருதயநாதர் தமது அன்பின் உயிருள்ள பலியான தேவ நற்கருணையில் மெய்யாகவே நிறைந்து இருக்கிறார்.

தேவ நற்கருணைக்கும் தமது திரு இருதயத்திற்குமுள்ள ஒற்றுமையை நமக்கு காட்டும் பொருட்டு புனித மார்கரீத் மரியா தேவ நற்கருணைக்கு முன்பாக ஆராதனை செய்துகொண்டிருக்கும் நேரத்தில் திருஇருதயமானது மூன்று முக்கியமான காட்சிகளைக் கொடுக்க விரும்பியது.

தேவ நற்கருணைத் திருவிழாவின் எட்டாம் நாளைத் தெரிந்து கொண்டு அன்பில் நிறைந்த திரு இருதயம் புனித மார்கரீத் மரியாவை நோக்கி, மனிதர்களை முழுமையாய் அன்பு செய்த இந்த இதயத்தை இதோபார் என்று காண்பித்து கூறியதாவது -

மகளே, உனக்கு எத்தனை தடவை நற்கருணைப் பெற்றுக் கொள்ள அனுமதி கிடைக்கிறதோ, அத்தனை தடவையும் நற்கருணைப் பெற்றுக்கொள். விசேஷமாய் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமைகளில் நற்கருணைப் பெற்றுக்கொள். வருடாவருடம் மிகுந்த ஆடம்பரத்தோடு நமது திரு இருதயத் திருவிழாவைச் சிறப்பித்து அன்று பரிகார நற்கருணை பெற்று ஒப்புக்கொடு.

நல்ல கிறிஸ்தவர்களையும், பக்தியுள்ள ஆன்மாக்களையும் ஏமாற்றும் பொருட்டு, தூய தேவநற்கருணைக்கு மிகுந்த வெளி மரியாதையைக் காண்பித்து அதற்குப் புகழ்ச்சியாக இனிமையான பாடல்களையும், செபங்களையும் ஏற்படுத்து. ஒரு பக்கத்தில் கடவுளுடைய மகிமைக்கும் அவருடைய பரிசுத்தத்தனத்தையும், நீதியையும் எடுத்துக்காட்டி வேறோர் பக்கத்தில் மனிதர்கள் இந்த தூய தேவனை அண்டிப் போகாமல் துர்ப்பாக்கியசாலிகளாக இருக்கிறார்களென்பதை ஞாபகப்படுத்தி, தேவ நற்கருணையை விட்டு ஆத்துமாக்களைப் பிரித்து வந்தார்கள். தேவ நற்கருணை நம்முடைய அன்றாட உணவாகவும், நமது ஆத்துமத்தின் உயிராகவும் இருந்து நமது இருதயத்தை தூய்மைப்படுத்தி தேவ வரப்பிரசாதங்களினால் அதை அலங்கரித்து, தமது திருஇருதயத்தில் ளிகிற தேவ சினேக அன்பு சுடரால் நிரப்புவதற்காகவே இயேசுகிறிஸ்து இந்த அருட்சாதனத்தை உருவாக்கினார். ஆதலால் தேவ நற்கருணை பெறுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் சுறுசுறுப்பு, தேவ அன்பு திருஇருதயப் பக்தியை தூய மார்கரீத் மரியாவுக்கும் உலகத்துக்கும் வெளியிட்டு மனிதர்களுடைய இதயங்களில் தேவ அன்பில் பற்றுக் கொள்ளச் செய்தார். திருஇருதயப் பக்தியானது எந்தெந்தப் பங்குகளில் விளங்கி வருகிறதோ அந்தப் பங்குகளிலெல்லாம், முன் தேவ நற்கருணை பால் அக்கறைக் கொள்ளாத பல கிறிஸ்தவர்கள் அடிக்கடி இன்னும் நாள்தோறும் தேவ நற்கருணை பெற்று வருகிறார்கள். இது தவிர, பல இடங்களில் மாதத்தின் முதல் வெள்ளியானது சகலமும் பரிகாரமாகப் பொதுநன்மை பெற்றுக் கொள்ளும் நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

புனித திருத்தந்தையரின் விருப்பப்படி தினமும் அல்லது அடிக்கடி உட்கொள்ளுகிற இந்த தேவ நற்கருணையிலிருந்து அடையக்கூடிய பலன்களையெல்லாம் பல கிறிஸ்தவர்கள் உயிருள்ள விசுவாசமில்லாமலும், தக்க ஆயத்தம் இல்லாமலும் இந்த அருட்சாதனத்தை உட்கொள்ளுகிறார்கள். சிலருக்கு நற்கருணை உட்கொள்ளுவது வழக்கம். வேறு சிலருக்கு தேவ நற்கருணை உட்கொள்ளுவது ஒரு சடங்கு. நற்கருணை வாங்கிய பிறகு பலர் சரியான நன்றி செலுத்துவதில்லை. இயேசுவின் திருஇருதயத்திற்குத் தங்களைத் திரும்பவும் ஒப்புக் கொடுக்கிறதில்லை.

மேற்கூறிய கிறிஸ்தவர்களைப் போல் நாமும் நடக்கக் கூடாது. தக்க ஆயத்தத்தோடும் உயிருள்ள விசுவாசத்தோடும் முன்மாதிரியோடும் தேவ நற்கருணையை நாடிச் செல்ல வேண்டும்.

வரலாறு.

சில வருடங்களுக்கு முன் சிரியா நாட்டிலுள்ள ஒரு கிராமத்தில் வாந்திபேதி நோய் பரவியது. அங்கு பெரும்பாலோர் கிறிஸ்தவர்கள், மீதிபேர் முகமதியர்கள். பங்கு பணியாளர்களும் கிறிஸ்தவர்களும் பொது செபம் செய்து ஆண்டவர் தங்கள் மேல் இரங்கி இந்தக் கொடிய நோயிலிருந்து தங்களைக் காப்பாற்றும்படியாகத் தங்கள் கிராமத்தின் தெருக்கள் வழியாகத் தேவ நற்கருணையைப் பவனியாகக் கொண்டுச் சென்றனர். அவர்களுடைய வேண்டுதலை ஆண்டவர் கேட்டருளினார்;

தேவ நற்கருணை பவனியால் உண்டான அதிசயத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார். தன் சொந்த ஊருக்கு திரும்பிப் போன போது அங்கேயும் அந்த நோய் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டார். உடனே இவர் குருவானவரிடம் சென்று தங்கள் கிராமத்திலும் தேவ நற்கருணைப் பவனி நடத்தும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். ஆனால் குருவானவரோ, எல்லா இடங்களிலும் தேவ நற்கருணை பவனி நடத்தக்கூடாது, அங்கே முகமதியர் அதிகாரத்தில் இருக்கிறார்கள். எனவே இவ்வித இடங்களில் பவனி நடத்துவது தேவ நற்கருணைக்கு அவமரியாதை செய்வது ஆகும் என்றார். உடனே முகம்மதிய பிரபு நான் அதற்கு உறுதி தருகிறேன், எந்த ஒழுக்கக் கேடும் நேராதபடி பார்த்துக் கொள்வது என் பொறுப்பு என்றார். ஆனால் குருவானவர் மீண்டும் முகமதியர்களும் கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து ஒழுங்காய் பவனியில் வரவேண்டியது என்றார்.

மறுநாள் அங்கு தேவநற்கருணை பவனி சிறப்புடன் நடந்தது. வாந்தி பேதி நோய் முற்றிலும் நீங்கியது. இச்செய்தி நாடு முழுவதும் பரவி தேவநற்கருணையில் வீற்றிருக்கும் இயேசுவின் திரு இருதயத்துக்கு மகிமையும், வணக்கத்தையும் கொடுத்தது.

இதைக் கேட்கிறவர்களே, நீங்களும் தேவ நற்கருணையில் உண்மையாகவே வீற்றிருக்கும் இயேசுவின் திரு இருதயத்தை அதிகமாய் மகிமைப்படுத்தி உங்கள் முழு இருதயத்தோடு அன்பு செய்யுங்கள். அடிக்கடி ஆண்டவரை உட்கொள்ளுங்கள். இயேசுவின் திருஇருதயப் பக்தியும், தேவ நற்கருணைப் பக்தியும் இவ்விரண்டும் நாம் இயேசுவோடு மிக நெருக்கமாவதற்கு உத்தமமான வழியாகும். நீங்களும் இயேசுவின் திரு இருதயத்திற்கு மனிதர்கள் காண்பிக்கிற அசட்டைத்தனம், நன்றியறியாமை இவைகளுக்குப் பரிகாரமாக தேவ நற்கருணையை அடிக்கடி உட்கொண்டு முடிந்தவரையில் அவரை சந்தித்து ஆராதிக்க முயற்சிப்பீர்களாக!

செயல்.

உன் இதயமானது ஆண்டவர் குடியிருக்கும் ஆலயமென்று எப்போதும் நினைத்து அதை எந்த ஒரு சிறிய மாசும் இல்லாமல் காப்பாற்றுவாயாக.

சேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்

“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே!  தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன்?  தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன்?  சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன்?  ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே!  தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே.  சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம்  பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே!  தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.  ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல.  உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும்.  என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.

இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே.  தேவரீர்  வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.  நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.

சேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கி­மான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா!  உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.  உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும்  அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.