இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 17-ம் தேதி.

இயேசுவின் திருஇருதயம் சிறந்த இறை பணிக்கு மாதிரிகை.

இயேசுவின் திருஇருதயமானது தன் வாழ்நாளெல்லாம் சிறந்த இறைப்பணிக்கு மாதிரிகையாயிருந்தது. திவ்விய இயேசு தமது பிதாவின் சித்தத்தை நிறைவேற்றி அவரை நோக்கி வேண்டிக்கொள்வதிலும், அவருக்குப் பணி செய்து அவரை மகிமைப்படுத்துவதிலும், எவ்வளவு ஞான ஆவல் காண்பித்தார்! புதிய ஏற்பாட்டின் காலத்தில் ஞாயிற்றுக்கிழமை எப்படியோ, அப்படியே சனிக்கிழமைப் பழைய ஏற்பாட்டின் காலத்தில் அனுசரிப்பது கடமை. நசரேத்து வீட்டில் இந்த ஒய்வுநாளைப் பிரமாணிக்கமாய் அனுசரித்து வந்தார்கள். தவிரவும் குறிக்கப்பட்ட நாட்களில் புனித மரியன்னை, சூசையப்பரோடு திவ்விய இயேசு தமது பிதாவுக்கு ஆராதனை செலுத்தும்படி ஜெபக்கூடத்துக்கு அல்லது தேவாலயத்துக்குப் போவார். தாமே தேவ வார்த்தையும் நித்திய ஞானமுமாயிருந்தாலும், தேவ கற்பனைகளின் விளக்கத்துக்கு மிக கவனத்தோடும் மிக மரியாதையோடும் காது கொடுப்பார்.

புனிதர்களும், குருக்கள், துறவிகள், அருட்சகோதரிகள், சுறுசுறுப்புள்ள கிறிஸ்தவர்களும், இயேசுக்கிறிஸ்துவின் திவ்விய மாதிரிகையைத் தங்களாலானவரையில் பின்பற்ற பிரயாசப்படுகிறார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒறுத்தல் முயற்சி செய்து தங்களைத்தானே ஜெயித்து ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள். திவ்விய இரட்சகருக்கு விருப்பப்படவும், அவரோடுகூட மோட்ச பாக்கியத்தை அனுபவிக்கவுமே தங்கள் ஞானக்காரியங்களை எல்லாம் பிரமாணிக்கமாய் நிறைவேற்றி, தேவ ஊழியத்தில் உத்தமமாய் நடந்து வருகிறார்கள். கிறிஸ்தவர்களுக்கடுத்த தேவ ஊழியமானது கடவுளுடைய கற்பனை, திருச்சபையின் கட்டளையைப் பிரமாணிக்கமாய் கடைபிடிப் பதிலும், நமது தேவ இரட்சகர் மட்டிலும், நமது அயலார் மட்டிலும், நமது விஷயமாயும், நாம் நிறைவேற்ற வேண்டிய கடமைகளைச் சரியாய் நிறைவேற்றுவதிலுந்தான் அடங்கியிருக்கிறது. பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம் (1யோவான் 3 : 18) என்ற யோவானுடைய சிறந்த வார்த்தைகளை நிறைவேற்றுவதில்தான் தேவஊழியம் அடங்கியிருக்கிறது.

ஒவ்வொருவரும் விசேஷித்தவிதமாய் அநுசரிக்க வேண்டியதேதென்றால், இறைவன் மட்டில் உண்மையான பக்திப் பற்றுதலைக் காண்பித்து தங்கள் தகுதிக்கு தேவையான புண்ணியங்களைச் சம்பாதிப்பதுதான். சில கிறிஸ்தவர்களிருக்கிறார்கள் - அவர்களுக்கு சில செபங்கள் சொல்லத் தெரியுமேயொழிய மற்றப்படி நல்ல கிறிஸ்தவர்களாய் வாழத் தெரியாது. ஏனென்றால் அவர்களிடத்தில் புண்ணியமென்பது கிடையாது; தங்கள் அந்தஸ்தின் கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவதில்லை; தங்கள் அதிகாரத்துக் குட்பட்டவர்கள் ஒழுங்காய் வாழ்கிறார்களாவென்று கவனிப்பதுமில்லை; தாங்கள் செய்யவேண்டிய நன்மையைச் செய்வதுமில்லை.

உண்மையும் உத்தமுமான தேவ இறை பணிக்கு விசுவாசமும், சுய பரித்தியாகமுமே அஸ்திவாரம். சுய ஒறுத்தலும் நிறைந்த வாழ்வு வாழவும், சிலுவையில் உயிர்விடவும் திவ்விய இயேசு எந்த கருத்து தூண்டி ஏவினதோ அந்த எண்ணத்தோடு வாழ்கிறவர் உத்தமமான தேவ ஊழியர்கள். இவர்களைத் தமது உண்மையான சீடர்களென்று இயேசுகிறிஸ்துநாதர் ஏற்றுக்கொள்ளுகிறார். உண்மையான இறைபணி வார்த்தைகளிலும், வீண் ஆசைகளிலுமல்ல, செயல்களிலும், சுய செ பத்திலும், ஒறுத்தலிலுமே அடங்கியிருக்கிறது.

நம்மைப் பின்பற்றப் பிரியப்படுகிறவன் எவனும் தன்னை மறுதலித்துத் தன் சிலுவையைச் சுமந்து கொண்டு நம்மைப் பின்பற்றட்டும் (மத் 16:24) என்று இயேசுகிறிஸ்துநாதர் திருவுளம்பற்றுகிறார்.

இந்த வார்த்தைகள் விசுவாசத்தில் உறுதியில்லாதவர்களுக்கும், தேவ ஊழியத்திலும் திரு இருதய அன்பிலும் பலவீனர்களுமாகிய சில கிறிஸ்தவர்களுக்குப் பயத்தை உண்டாக்கலாம். ஆனால் அவர்கள் திரு இருதயத்தை தங்களுக்கு உதவியாகக் கூப்பிடுவார்களேயாகில், ஆண்டவருடைய வரப்பிரசாதம் அவர்களைப் பலப்படுத்தும். தங்களைத்தானே ஜெயிக்கக் கற்றுக்கொள்வார்கள். புனிதர்களின் தாராள குணத்தைப் பின்பற்றுவார்கள். உத்தம தேவ ஊழியத்தால் மோட்ச பாக்கியத்தைச் சுதந்தரித்துக் கொண்ட நம்மைப்போல் பலவீனருமாய் நமது சுபாவத்தையுடையவர்களுமாய் இருந்தார்கள். சிலருக்கு நம்முடைய வயதுதான், நம்முடைய அந்தஸ்துதான். நமக்கு வரும் சோதனைகளும் இடையூறுகளும் அவர்களுக்கும் வந்தன. ஆனால் அருட்கொடைகளுக்கு பிரமாணிக்கராய் நடந்து, தங்கள் சுபாவத்தோடு இடைவிடாமல் போராடி, தேவ ஊழியத்தில் நிலைத்திருந்து, தங்கள் முயற்சியாலும் சுய தியாகத்தாலும் சம்பாதித்த மோட்சபாக்கியத்தை இப்போது அனுபவிக்கிறார்கள்.

புனித மார்கரீத் மரியம்மாள் இவ்விஷயத்தில் சொல்வதாவது: தேவ ஊழியத்தில் தளராத விடாமுயற்சியும், மீட்பு அலுவலில் பின்வாங்காத தைரியமும் நம்மிடத்திலிருக்க வேண்டும். கடைசிவரையில் நிலைத்திருந்து ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு தான் மோட்சமுடி கிடைக்கும். இத்தகைய ஜெயசீலர்களில் நாமும் ஒருவராயிருக்க வேண்டிக்கொள்வோமாக!

ஒவ்வொருவரிடத்திலும் தான் விசேஷவிதமாய்ப் போராட வேண்டிய ஒரு முக்கியமான துர்க்குணமுண்டு. சிலரிடத்தில் அது ஆங்காரமாயிருக்கலாம். வேறு சிலரிடத்தில் அது மோகமாயிருக்கலாம். இன்னும் சிலரிடத்திலே அது வேறு துர்க்குணமாயிருக்கலாம். உனக்கு மிகவும் விருப்பமான இந்த விசேஷ துர்க்குணம் துவக்கத்தில் அவ்வளவு கனமானதாயும் ஆபத்துள்ளதாயும் தோன்றாதிருக்கும். எவ்வித சிந்தனை, வாக்கு, செயல்களுக்கு இடங்கொடுப்பதும், நினைத்த புத்தகத்தை வாசிப்பதும், அவ்வளவு தவறில்லையென்று நீ நினைப்பாய். இவ்வகை தகாத யோசனைகளெல்லாம் சாத்தானிடமிருந்துதான் வருகிறது. நீ ஆரம்பத்திலேதானே இந்தத் தீய நாட்டங்களை ஜெயிக்காமல் இருப்பாயேயாகில் உன் ஆத்தும் ஈடேற்றத்தை தடை பண்ணலாமென்று சாத்தானுக்கு நன்றாய்த் தெரியும். இந்த பாவநாட்டம் சிறிது சிறிதாய் வளர்ந்து உன்னிடம் முழுதும் குடி கொண்டால், சோதனை வரும்போது நீ கட்டாயம் சாவான பாவத்தில் விழுவாய் என்பதை சாத்தான் அறிந்திருக்கிறது. இந்த நரகப்பேய் உன்னுடைய விசுவாசத்தையும், புத்தியையும் தடுமாறும்படி செய்து, உன்னை ஆபத்தான நிலையில் நிலைநிறுத்த தன்னாலியன்ற முயற்சி செய்யும்.

நாம் எதிர்த்துப் போராடாத ஒரே ஒரு பாவநாட்டம் நம்மை நித்திய கேட்டுக்கு உள்ளாக்குமென்பதை மறந்து போகக்கூடாது. யூதாசிடம் பண ஆசை குடிகொண்டிருந்தது. இந்த ஒரே ஆசைப்பற்றுதல் அவனை எந்த நிலைக்கு கொண்டுவந்துவிட்டதென்று யாவரும் அறிவோம். இன்னும் எத்தனையோ பேர் தாங்கள் ஜெயிக்காமல் விட்ட ஒரே ஒரு துர்க்குணத்தால் நித்தியத்துக்கும் அழிவடைந்தார்கள்.

நம்முடைய விசுவாசக்குறைவும், தேவ ஊழியத்தில் நம்மிடத்திலுள்ள பலவீனமுமே சாத்தானோடும் பாவ பாசங்களோடும் தாராள குணத்தோடு நாம் எதிர்த்துப் போராட நமக்குப் பெரிய தடையாயிருக்கிறது. உலக விஷயங்களில் நாம் காண்பிக்கிற விடாமுயற்சியும், தைரிய சுறுசுறுப்பும், தேவ ஊழியத்திலும் நாம் காண்பிக்கும்படி கடவுள் அருள்புரிவாராக. ஒரு வேலையை விரும்பி, அல்லது செல்வ மகிமையைத் தேடி சில கிறிஸ்தவர்கள் இராப்பகலாய் அதே ஞாபகமாயிருப்பார்கள். தாங்கள் விரும்புகிற காரியத்தில் வெற்றி அடையும் வரையிலும் தங்களாலான பிரயாசப்பட்டு மிகப்பெரிய துயரங்களையும், கஷ்ட நஷ்டங்களையும் முழு மனதோடு ஏற்றுக்கொள்வார்கள்.

திரு இருதயப் பக்தர்களோவென்றால் தேவ ஊழியத்தில் பிரமாணிக்கமும் தாராள குணமுமுள்ளவர்களாய் நடக்கும்படி கிறிஸ்தவனுக்குரிய புண்ணியங்களையெல்லாம் அநுசரித்து, தங்கள் கடமைகளையெல்லாம் உத்தம் விதமாய் நிறைவேற்றி இயேசுவின் திரு இருதயத்தின் சித்தப்படி தாங்களிருக்கிற நிலையில் தங்களை புனிதப்படுத்த தினமும் தங்கள் தீர்மானங்களைப் புதுப்பிக்க வேண்டும்.

வரலாறு.

பிரான்ஸ் நாட்டு பிரபுக்களில் ஒருவராகிய எல்ஸியா தமது அனுதின இருப்பிடமாகவும், தேவாலயமாகவும் இயேசுவின் திருஇருதயத்தைத் தெரிந்து கொண்டார். தமது கடமையின் நிமித்தம் ஒரு சமயம் குடும்பத்தைவிட்டு பல மாதகாலம் தூரமான இடத்திற்கு சென்றிருந்தபோது அவருடைய பக்தியுள்ள மனைவி அவருடைய நலனைப்பற்றி மிகுந்த கவலையோடு விசாரித்தாள். பிரபுவானவர் மறுமொழியாக நீ என்னை எந்த நேரத்திலும் பார்க்க முடியும் என்ற நிலையில் இருக்கும்போது ஏன் இவ்வளவு கவலைப்பட வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை . இயேசுவின் திரு இருதயம் என் வசிக்கும் இருப்பிடமென்று உனக்குத் தெரியும். நான் அங்கேதான் நாள்தோறும் வாழ்கிறேன். உனக்கு எந்த நேரம் விருப்பமோ அந்த நேரத்தில் என்னை நீ அங்கே காணலாம் என்று எழுதினார்.

சிந்தனை.

இயேசுவின் சத்தத்தை நீ கேட்கும்போது உன் இருதயத்தை இறுகச் செய்யாதே. சிலவேளை இந்த சப்தம் ஒருபோதும் திரும்ப உன் காதில் விழாது. தமக்குச் சொந்தமான இருதயங்கள் சுய நலத்திலிருந் தும் வேறு எந்தப் பற்றுதலிலிருந்தும் விலக வேண்டுமென்பது ஆராதனைக்குரிய இயேசுவின் திருஇருதயத்தின் விருப்பம்.

செபம்.

இயேசுவின் இனிய திருஇருதயமே! நான் உம்மை அதிகமதிகமாய் அன்பு செய்ய செய்தருளும். (300-நாட் பலன்.)

சேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்

“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே!  தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன்?  தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன்?  சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன்?  ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே!  தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே.  சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம்  பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே!  தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.  ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல.  உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும்.  என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.

இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே.  தேவரீர்  வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.  நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.

சேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கி­மான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா!  உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.  உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும்  அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.