சிந்தனைக்குச் சில

• நாம் விரும்புகிறவற்றை அல்ல. மாறாகக் கடவுள் விரும்புகிறவற்றையே அவருக்குச் செய்வோம்.

• மாதா நம்மை விட அருள் கொஞ்சம் மிகுதியாகப் பெற்றவர்கள் அல்ல! மாறாக அவர்கள் அருள் நிறைந்தவர்கள். அவர்கள் மட்டுமே அருள் நிறைந்தவர்கள்.

• பாவசங்கீர்த்தனத்தை அலட்சியம் செய்பவன் கண்களைத் திறந்து கொண்டு நரகத்தில் குதிக் கிறான்.

• மாதாவைச் சந்தோஷப்படுத்த விரும்புகிறாயா? ஜெபமாலை ஜெபிப்பதை விடச் சிறந்த வழி இல்லை .

• ஒவ்வொரு நாளும் நற்கருணை முன்பு 153 மணி ஜெபமாலை ஜெபிக்க விரும்புகிறேன் - பாப்பரசர் 23 ஆம் அருளப்பர்.

• அக்டோபர் மாதத்தில் திவ்விய நற்கருணை ஸ்தாபிக்கப்பட்டு ஜெபமாலை சொல்லப்பட வேண்டும் - பாப்பரசர் 13ஆம் சிங்கராயர்.

• ஒவ்வொரு அருள்நிறை மந்திரத்துக்கும் 2000 நாள் பலன் உண்டு. அப்படியானால் ஒரு முழு ஜெபமாலைக் கான பலன் எவ்வளவு பெரியது!

• விண்ணகத்தில் இருப்பதை விடச் சிறந்த நேரம் ஒருவன் நற்கருணை உட்கொண்ட பிறகு உள்ள நேரமே. ஒருபோதும் அந்த நேரத்தை வீணடித்து விடாதீர்கள். கடவுளோடு பேசுவதை விட்டுவிட்டு வேறு காரியங் களில் ஈடுபடாதீர்கள். அந்த நேரத்தில் மனிதர்களைப் பாராட்டாதீர்கள்.

• வுல்காத்தா வேதாகமம் அதிகாரப்பூர்வமானது; தப்பறைகள் இல்லாதது, போதிக்கவும், திருவழிபாட் டுக்கும் ஏற்றது (திரிதெந்தின் சங்கம், பாப்பரசர்கள் 15ம் ஆசீர்வாதப்பர், 13ம் சிங்கராயர், 12ம் பத்திநாதர்.)

• தேவாலயம் இறைவனின் வீடு; அதைப் பொது நிகழ்ச்சிகளுக்கான மண்டபம் போல் ஆக்காதிருப்போம்.