அர்ச். சூசையப்பருக்குத் தன்னை முழுதும் ஒப்புக்கொடுக்கும் ஜெபம்

மகிமை நிறைந்த பிதாப்பிதாவாகிய அர்ச். சூசையப்பரே!  தேவமாதாவுக்குப் பரிசுத்த பத்தாவானவரே! சேசுக்கிறீஸ்துநாதரை வளர்த்த தகப்பனாரே!  தேவரீரை நம்பினவர்களுக்குத் தப்பாத அடைக்கலமே, நன்மரணத்துக்கு மாதிரிகையும் தஞ்சமுமானவரே, தேவரீருடைய தாசராயிருக்கிற நாங்கள் எங்களை முழுவதும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.  உமது சிம்மாசனத்தண்டையில் சாஷ்டாங்கமாக விழுந்து, ஏக திரித்துவமான சர்வேசுரனுடைய சமூகத்திலேயும், உமது திவ்விய குமாரனான சேசுநாதருடையவும், உமது பரிசுத்த பத்தினியாகிய தேவமாதாவினுடையவும் சகல மோட்சவாசிகளுடையவும் அண்டையிலேயும் மிகுந்த வணக்கத்துடனே தேவரீரை எங்களுக்குத் தகப்பனாராகவும், ஆண்டவராகவும், அடைக்கல மாகவும் தெரிந்து கொள்ளுகிறோம்.  தேவரீருக்கு எங்களுடைய ஆத்துமத்தையும், சரீரத்தையும், சக்திகளையும், உடைமையுற்பத்திகளையும், எங்களுடைய மற்ற யாவற்றையும் ஒப்புக்கொடுக் கிறோம்.  உமது மகிமையைக் கொண்டாடி உமக் குரிய வணக்கத்தைப் பிரசித்தம் பண்ணி ஒரு நாளாவது உமக்கு ஸ்துதியையும் வேண்டுதலையும் செலுத்தாமல் இருக்கப்போகிறதில்லை.  தேவரீரும் இடைவிடாமல் எங்களை நினைத்து எங்களுடைய இக்கட்டுகளை நிவிர்த்தி பண்ணி எங்களை புண்ணிய நெறியிலே வழுவாமல் நடப்பித்தருளும். சேசுநாதருடையவும் தேவமாதாவுடையவும் திருக்கரங்களில் பாக்கியமான மரணத்தையடைந்த நீர்,  நாங்கள் மரிக்கும்போது இஷ்டப்பிரசாதத்தோடே மரித்து மோட்ச பேரின்ப பாக்கியத்தை அடைந்து, உம்முடனே என்றென்றைக்கும் வாழப்பண்ணியருளும்.  உமது பிள்ளைகளாயிருக்கிற எங்களைக் கைவிடாதேயும் தகப்பனாரே. 

ஆமென்.