அர்ச். சூசையப்பரைக் குறித்து சுகிர்த மன்றாட்டு

கிருபை, தயாளம் நிறைந்தவருமாய், எங்கள் நேச வணக்கத்துக்கு உரியவருமாயிருக்கிற பிதாப் பிதாவாகிய அர்ச். சூசையப்பரே! தேவரீரை மன்றாடி தேவரீருடைய அடைக்கலத்தைத் தேடி, உம்மிடத்தில் தாம் இரந்து கேட்டதை அடையாமல் போனதில்லை என்று அர்ச். தெரசம்மாள் நிச்சயித்ததை நினைத்தருளும். என் அன்புள்ள தகப்பனாரே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு, நான் உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன்.  பெருமூச்செறிந்து பாவியாயிருக்கிற நான் உமது தயாளத்துக்குக் காத்துக்கொண்டு உமது சமூகத்தில் சாஷ்டாங்கமாய் விழுகிறேன். மிகவும் இரக்கமுள்ள பிதாப்பிதாவாகிய அர்ச். சூசையப்பரே! சொற்பமும் அயோக்கியமுமாயிருக்கிற என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரராய்க் கேட்டுக் கிருபை புரிந்தருளும். 

ஆமென்.