மூன்று அருள் நிறை மந்திர பக்தி

அர்ச். தேவமாதாவுக்கு சர்வேசுரன் அளித்த ஞானம், வல்லமை, இரக்கம் என்னும் மூன்று வரங்களைக் குறித்து அநுதினமும் காலையிலும் மாலையிலும், மூன்று அருள் நிறை செபம் சொல்லி, மரியாயே! என் நல்ல தாயாரே!  இன்றைக்குச் சாவான பாவத்திலிருந்து என்னைக் காத்துக் கொள்ளும் என்ற செபத்தை செபிப்பதை விட அதிக இலேசானதும், யாவராலும் எளிதாய் அனுசரிக்கக் கூடியதுமான பக்தி முயற்சி வேறு இல்லை. கடைசி வரை புண்ணியத்தில் நிலை கொள்ளவும் நல்ல மரணம் அடையவும் இப்பக்தி முயற்சி தக்க வழியயன்று தேவதாயார் தாமே அர்ச். மெட்டில்டா அம்மாளுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

13-ம் சிங்கராயர். (200-நாள் பலன்)