அர்ச். சலேத் மாதாவின் காட்சி

1846-ம் ஆண்டு சலேத் மலையில் மாதா மாடுமேய்த்த மெலானி என்ற சிறுமிக்கும் மாக்ஸிமின் என்ற சிறுவனுக்கும் காட்சியளித்தார்கள்.  உயிருள்ள பாடுபட்ட சுரூபம் அவர்களின் கழுத்தில் தொங்கியது. தான் நேசித்த மக்களின் அசட்டை துரோகங்களால் தன் திருக்குமாரன் படும் அவஸ்தையைத் தாங்கமாட்டாமல் அக்காட்சி முழுவதும் மாதா கண்ணீர் சிந்தி அழுதார்கள்.  ஒரு தாயின் கண்ணீரும் அழுகையும் யாரையும் மனந்திருப்பும், அது நம்மையும் பரிகார வாழ்விற்குத் தூண்ட வேண்டும்.