அர்ச்சியசிஷ்ட பதுவை அந்தோனியாருடைய 13 மன்றாட்டு

(திருநாள் : ஜு ன் 13)

1. எல்லாத்திற்கும் ஆதி காரணரான சர்வேசுரனுக்கு மகா பிரியமுள்ளவருமாய், சத்தியமறை நெறிக்குப் பொக்கிஷத் திரவியமுமாயிருக்கிற அர்ச். அந்தோனியாரே! சர்வேசுரனுடைய தயையையும், இரக்கமுள்ள பட்சத்தையும் நாங்கள் நாடி நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்யக் கிருபை செய்தருள வேணுமென்று உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம். பர. அருள். திரி.

2. உடலை ஒறுத்து, தரித்திர வேஷம் எடுத்துக் கொண்டு மகா அற்புதங்களைச் செய்து கொண்டு வந்த அர்ச். அந்தோனியாரே! இந்த உலகத்தில் சத்துருக்களோடு யுத்தம் பண்ணித் தரித்திரத்தைக் கைக்கொண்டு புண்ணிய வழியிலே நாங்கள் பிரவேசிக்கும்படி கிருபை செய்தருள வேணுமென்று உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம். பர. அருள். திரி.

3. சத்திய மறையின் நெறியின்படியே வழுவாமல் நடந்து உலக வெகுமான விரும்புதலையும் சிற்றின்ப ஆசையையும் வெறுத்துச் சந்நியாச வஸ்திரம் உடுத்தி உலகத்தில் அநேக அற்புதங்களைச் செய்துகொண்டு வந்த அர்ச். அந்தோனியாரே!  நாங்கள் உலக மகிமைகளையும் துரோகமுள்ள துர்க்குணத்தையும் விட்டுத் திருச்சபைக் கற்பனையின்படியே நடந்து சர்வேசுரனுக்கு யோக்கியமுள்ளவர்களாய் இருக்கக் கிருபை செய்தருள வேணுமென்று உம்மை வேண்டிக்கொள்கிறோம். பர. அருள். திரி.

4. சர்வேசுரனுடைய வேதத்தின் நெறியின் படியே நடந்து விரத்தத்துவத்தில் உறுதிப்பட்டுத் தவத்தையும் தருமத்தையும் பின்தொடர்ந்த அர்ச். அந்தோனியாரே!  உலகத்தில் எங்களுக்கு நல்ல மனதோடு உபகார சகாய தருமங்கள் செய்கிற பேர்களுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து தர்மத்தைக் கொண்டிருக்கிற விசுவாசிகளாகத்தக்கதாகக் கிருபை செய்தருள வேணுமென்று உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம். பர. அருள். திரி.

5. இஸ்பானியா சீமைக்கு நவநட்சத்திரமுமாய் ஒளியுமாய் வெகு அற்புதம் உள்ளவருமான அர்ச். அந்தோனியாரே! திருச்சபையிலிருக்கிற நாங்கள் எங்கள் மரணத் தறுவாயிலே நல்ல மனதோடு ஆத்தும சுத்திகரம் செய்து தேவ இஷ்டப் பிரசாதத்தை அடையவும், எங்கள் ஆத்துமத்தில் இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரன் நட்சத்திர ஒளிபோல் இறங்கி எங்கள் ஆத்துமத்தை மோட்சத்திற்குக் கூட்டிக் கொண்டு போகும்படி கிருபை செய்தருள வேணுமென்று உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம். பர. அருள். திரி.

6. சத்திய வேதபாரகருக்கும் சுவிசே­கருக் கும் நிர்ணயித்த மறைநெறியை விகிதப்படுத்தி யிருக்கிற சுவிசே­த்தை மகா உந்நதமாய் நிறை வேற்றித் திருச்சபையோர்களை ஆதரவோடு அரவணைத்துக் கொண்டு வருகிற அர்ச். அந்தோனியாரே! நாங்கள் எங்கள் அறியாமை யில் எங்கள் பாப்பு, மேற்றிராணிமார்கள், குருக்கள், உபதேச போதனைகளுக்கும் திருச்சபை யினுடைய கற்பனைகளுக்கும் கீழ்ப்படிந்து நித்திய மோட்சம் அடையும்படி கிருபை செய்தருள வேணுமென்று உம்மை வேண்டிக் கொள்ளு கிறோம். பர. அருள். திரி.

7. சர்வேசுரனுடைய கற்பனைக்கும் அவரு டைய திருச்சபைக்கும் கீழ்ப்படிந்து நடவாமல் தேவ துரோகத்தினாலேயும், கர்மப்பாவத்தினா லேயும் சுழன்று திரியும் குருட்டாட்டமான அவிசு வாசிகளுக்கு மகா உக்கிரத்துடனே உபதேசித்து அவர்கள் மனம் இளகித் திடுக்கிட்டுக் கலங்கி அஞ்ஞான மதத்தை விட்டு மெஞ்ஞான வழியைத் தேடும்படி செய்வித்த அர்ச். அந்தோனியாரே!  உலகிலிருக்கிற பதிதர், அஞ்ஞானிகளும் அஞ்ஞான மறைநெறியை விட்டு மெஞ்ஞான வழியில் திரும் பவும், நாங்களும் எங்கள் பிள்ளைகள் சகோதரர் களும் நடக்கிற துன்மார்க்கத்தை விட்டு நீர் எங்களுக்குப் படிப்பிக்கிற நல்ல வழியில் நடக்கத் தக்கதாகக் கிருபை செய்தருள வேணுமென்று உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம். பர. அருள். திரி.

8. இடி, பெருங்காற்று மழையில் ஒரு ஸ்திரீ யானவள் மேனி நனையாமல் அவளுக்கு மகா அற்புதங்களைச் செய்த அர்ச். அந்தோனியாரே!  நாங்கள் செய்த பாவத்தினாலே வருகிற இடி பெருங்காற்றான நரக தீவினையில் விழுந்து நனை யாமல் சர்வேசுரன் எங்களை இரட்சித்துக் கொள்ளும்படிக்குக் கிருபை செய்தருள வேணு மென்று உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம். பர. அருள். திரி.

9. வெந்நீரில் விழுந்து இறந்து போன பெண் பிள்ளையைப் பன்னீரில் விளையாடுகிறாப்போல மகா அற்புதங்களைச் செய்த அர்ச். அந்தோனி யாரே!  எங்கள் மரண சமயத்திலே தேவ இஷ்டப்பிரசாதமில்லாமல் மரணத்தை அடைந்து வெந்நீரான நரகத் தீயில் விழாமல் சர்வேசுர னுடைய தயையின் காலத்தில்தானே எங்களுக்கு வேண்டிய நன்மைகளைத் தந்து பன்னீரான மோட்ச இராச்சியத்திலே களிகூர்ந்திருக்கும் படிக்குக் கிருபை செய்தருள வேணுமென்று உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம். பர. அருள். திரி.

10. சர்வேசுரனுடைய கற்பனைகளை மீறின பசாசுக்களை உமது உறுதியுள்ள விசுவாசக் கிரியையினாலே ஜெயித்து அவைகளை நடுநடுங் கச் செய்து, நரகக் குழியில் தள்ளின அர்ச். அந்தோனியாரே!  எங்களுக்கு எதிராளியுமாய்ப் பசாசுக்கு அடிமைப்பட்டவர்களுமாய் இருக்கிற பதித சத்துராதிகளை ஜெயித்து சத்திய மறை நெறியின்படி வழுவாமல் நடக்கும்படிக்குக் கிருபை செய்தருள வேணுமென்று உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம். பர. அருள். திரி.

11. சத்தியமறை நெறியை அறிந்தவர்களும் அறியாதவர்களுமாயிருக்கிற அக்கிரமமான பாவி களை நல்வழியில் திருப்பப் புத்தி சொல்ல அவர்கள் கேளாததினால் சமுத்திரத்தின் மீன்கள் உமது உபதேசத்தை மகா விருப்பத்துடனே கேட்க மகா அற்புதங்களைச் செய்த அர்ச். அந்தோனி யாரே! நாங்கள் உம்முடைய உபதேசத்தை பக்தி யுடனே கேட்டுக் கீழ்ப்படிந்து நடக்கக் கிருபை செய்தருள வேணுமென்று உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம். பர. அருள். திரி.

12.  உலக ஆசையை வெறுத்து விசுவாசப் பற்றுதலால் மகா அற்புதமாக மரித்தவர்களை எழுப்பி இரட்சித்துத் திடமான விசுவாசத்தால் அவர்கள் மோட்சகதி அடையும்படிக்கு செய்த அர்ச். அந்தோனியாரே!  நாங்கள் பாவம் என்கிற மரணத்தை விட்டு புண்ணியம் என்கிற மோட் சத்தை விரும்பித்தேட கிருபை செய்தருளும்படி எங்களுக்காக ஆண்டவரைப் பார்த்து வேண்டிக்கொள்ள வேணுமென்று உம்மை  வேண்டிக் கொள்கிறோம். பர. அருள். திரி.

13.   சர்வேசுரனுடைய மகிமைப்பிரதாபத் திற்கும் உம்முடைய பழுதற்ற பக்தி சுவாலையுள்ள விசுவாசத்திற்கும் ஒருமித்திருக்கிற உமது நிறை வான நன்மைத்தனத்தை சேசுநாதர் கண்டு மிகுந்த ஆவலோடும் தாற்பரியத்தோடும் சிறு குழந்தை யாக உம்முடைய கையில் எழுந்தருளின அற்புதங் களைப் பார்த்து எங்கள் மரணத் தறுவாயிலே சேசுநாதர் எழுந்தருளி வந்து எங்களை இரட்சிக்கக் கிருபை செய்தருள வேணுமென்று உம்மை  வேண்டிக் கொள்ளுகிறோம். பர. அருள். திரி.

பிரார்த்திக்கக்கடவோம்

இஸ்பானியா இராச்சியத்திற்கு நவநட்சத்திரமே! தரித்திரருடைய விலைமதிக்கப்படாத மாணிக்கமே!  நிர்மல பரிசுத்ததனத்தின் உப்பரிகையே!  தேவரீர் இத்தாலியா இராச்சியத்தின் தீபமுமாய் பட்சத்தின் அடையாளங்களுடனே பதுவைப் பதியின் பிரகாசமான சூரியனைப் போல சத்தியங்களைப் போதித்தவருமாய் இருக்கிறீர். அர்ச். அந்தோனியாரே! நமது கர்த்தாவான சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் யோக்கியவான்களாயிருக்க எங்களுக்காகப் பிரார்த்தித்துக்கொண்டு நாங்கள் கேட்கிற மன்றாட்டுக்களைப் பெறுவிக்க அநுக்கிரகம் செய்தருளும்.

சர்வேசுரா சுவாமி! தேவரீரை வெளியரங்கமாய் ஸ்துதிக்கிற உம்முடைய திருச்சபையானது ஞான உதவிகளினாலே அலங்கரிக்கப்பெற்று எங்கள் ஆதாரமாயிருக்கிற சேசுக்கிறீஸ்துவின் நித்திய சந்தோ­ங்களை அநுபவிக்கப் பெற்றது மாய் இருக்கக் கடவது. 

ஆமென்.