அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரின் சத்துரு சங்காரமாலை.

காப்பு 

அகில சராசா பர்வ தாகாயமும் படைத்த
தகைமை நின்ற கடவுளைத் தான்கையேந்து மகிமையுற்ற
அந்தோனி மாமுனியே யம்புவியிலுன் சதமே
வந்துவா வா வா ததி

மன்றாட்டுமாலை 

சீர்பூத்திலங்கு பாதுவை மாநகர் சிறந்திலங்கப்
போர்பூத்திலங்கு சந்தந்தோனி ராயர் மேற் பிரபலமாய்த்
தார்பூத்திலங்கு சத்துரு சங்காரமாலை தமிழ்பாடுதற்குக்
கார்பூத்திலங்கிய கர்த்தர் திருவடி காப்பதுவே

அட்சணமேகவினாதாரம் பெற்று மலைகடலின்
மட்சந் தனக்கு உபதேசமோதின மாமுனியே
பட்சமாயும்மையுச் சரிந்தேன் பத்தைந்தினை பாடுவதற்கு
இட்சணம் வந்து சந்தந்தோனி என்பங்கின் முன்னிற்பாயே

கோவிகளாகிய பதிர்களிடரைத் குவலயத்தில்
சாவிய ஞானவுருவாய் சமைத்து அத்தருணத்தில்
மேவிச் சிலுவைதனை விட்டிறங்கியென் மெய் குருவே
என்னாவுக்கருள் புரிவாய் சந்தந்தோனி ராசநன்முனியே

பற்றவர் போற்றிடும் பாதுவை மாநகர் பார்த்திபனே
அத்தினாரேசுவை மார்போடணைந்த வருள்முனியே
சத்தமற்றேயும்மை யுச்சரிக்கு மித்தருணத்திலுள்
சித்தம் வைத்தே வருவாய் சந்தந்தோனி ராச திருமுனியே

ஆமென வான்புலி திரைகடல் யாவுமரை நொடியில்
ஓமெனப் கடைத்தோனேக பிதாவினுரைப்படியே
நாமென மூன்றுலோக நின் காவலில் நடத்திவரும்
ஈமெனழுந்தருள்மாய் சந்தந்தோனி ராசனென்குருவே

அன்பரனேக பிதாநினருள் தர வரியசுதன்
என் பரனேசு நின் செங்கரமேந்திய வேகனிடம்
ஒன்பரமான பரகதி மேவுமுகமது தஞ்சம்
நம்பினேனின்னருள் சந்தந்தோனி ராசகனிமுனியே

பாவலர் போற்றிடும் வாலசிரோமணி பார்த்திபனே
நாவாலுமது திருநாமமோதி நமஸ்கரிக்க வுந்தன்
ஆவலினோடுன்னருளைப் புரிந்து அனுதினமுங்
காவலிருந்தென்னையாள் சந்தந்தோனி ராசகாரணனே

ஆரோவெனக்கிந்த வல்லினை செய்த கசடாது
பேரோவுமக்குத் தெரிந்திருக்கும் பொல்லாப் பேயுனென்மேல்
லீறாயனுப்பிய யேவுமிப் பேய்களை வெருட்டியென்பால்
சீராயெழுந் தருள்வாய் சந்தந்தோனி ராசதிருமுனியே

அந்தியுஞ்சந்தியு முன்றிரு நாமத்தை யனுதினமுஞ்
சிந்தையற்றே தொழுமெளியேன் தனக்குள் சகாயமருள்
தந்தை மடுந்தீனுயிரை மீட்ட தயவது போல்
எந்தனை யாண்டருள்வாய் சந்தம்தோனி ராசனெனுங்குருவே

கையாலுமென்னை யடியாமல் பொல்லாக் கருவெடுத்து
மெய்யாலெனப் போலுருவை சமைத்து உருச்செபித்து
பொய்யான பேய்களை யோதியேவிட்ட புலையருட
கையை முறித்திடுவாய் சந்தந்தோனி ராசவுத்தமனே

முன்னாலெனது வலுப்பிணிமாற்றி நின் முற்றித்தந்தாய்
பின்னாலெனக் குபகாரஞ் செய்தாய் பெற்றவர் போல்
என்னாலுனக்கு செய்வதொன்றில்லை யெளியவனானான்
உன்னாலென்னைக் காத்தருள்வாய் சந்தந்தோனி ராசவுத்தமனே

வஞ்சவுலகினில் முன்னாளில் வேதமகிமை செய்தாய்
துஞ்சியமைந் தோர்க்குயி ரளித்தாயுன் சித்தமதால்
தஞ்சமுமது திருமலர்க் கஞ்சத்தருணத்திலே
அஞ்சாமவாண்டருள் வாய்சந்தந்தோனி ராசவனுகூலனே

பிடித்தேனுமது திருமலர் பாதத்தைப் பேதையுனான்
பிடித்தேன் தமிழர் லுச்சரித்தேனுமைப் பரிபாலன்பால்
துடித்தே வருகும் வன்னாகப்பேயைச் சுறுக்கிலன்பாய்
பிடித்தேயாத்திடுவாய் சந்தந்தோனி ராசபுண்ணியவனே

பொல்லாத வஞ்சகர் வர்மித்தென்மேல் வெகு போட்டி செய்து
கொல்ல நினைத்து யேவினபேயையிக் குவலயத்தில்
வில்லதைக் கண்ட சிட்டது போல் விரண்டிச் செய்,
சொல்லா வடித்திடுவாய் சந்தந்தோனி ராசகாவலனே

மாவைக் குவித்து பள்ளையம் போட்டு வலுப்பூசையிட்டு
பூவைக் கொணர்ந்து உருவே செபித்துப் பலிகொடுத்து
என்னையுங்கொல்ல யேவின பேயையிடுப் பொடித்து
கண்ணைப் பிடுங்கிடுவாய் சந்தந்தோனி ராசகாவலனே

வன்னியின் பேய்கள் மந்திரத்தாலென்னை வாட்டுதற்கு
உன்னிதமாக வுருவதையே செபித்தோதிய பேய்ப்
சென்னித் துணிந்ததன் மாரைப் பிளந்து சில நொடியில்
நன்னீதமா யெனை யாண்டருள்வாய் சந்தந்தோனி ராசநன்முனியே

சக்கரமாரனபேதன ஸ்தம்பனஞ் சல்லியத்தின்
உக்கரமொட்டிய மோகன மூக்காடன முருசெபித்து
முக்கியமாக வோதியப்பேயை முடிதறித்து மென்பால்
இக்கண மெழுந்டசந்தந்தோனி ராசவென்குருவே

செத்தவங்கண்ட கழுகதுபோ லென்னிடத் தேடிவரும்
நித்தம்ழல் நாவன்னியின் பேய்களை நிமிஷமதில்
பத்தியெரித்துக் குத்தியிரித்திப் பர்ணபந்து தென்பால்
சித்தம் வைத்தழுந்தருள்வாய் சந்தந்தோனி ராசசிகாமணியே

வெள்ளைமதைக் கண்ட நாரைப்போ லென்னிடமேவிவரும்
கள்ளபசாசுகள் தன்னைப் பிடித்து இருகாலொடித்து
பள்ள நாகத்தில் பத்தியேவோட பறக்கடித்தென்
உள்ளத்தில் புக்கிடுவாய் சந்தந்தோனி ராசிகாமணியே

கருவையெடுத்து வஸ்துவாலாட்டிக் கயாதினால்
உருவைப்பிடித்தென் போதைச் சொல்லியோதிவிட்ட
பெருமாள் பிசாசைப் பிடித்தேயடித்துப் பின் என்னுள்ளத்திற்
குருவாயிருந்தருள்வாய் சந்தந்தோனி ராசனென் குருமுனியே

கடினத்துடனே சுக்காலச் செய்து கடலைக்கரியதனால்
துடினத்துடனே தலைமண்டை யோட்டில் கழியெழுதிப் படினத்துடனே
புதைக் கக் கருவைப் பறக் கடித்து நடி ன த துட னே
 யெனையாண்டருள்வாய் சந்தந்தோனி ராசனென் நன்முனியே

மாவலுருச் செய்து மந்திரமோதி வசியரைத்துக் காவுங்கொடுத்து
உருவே ஜெபித்துக் கருமிஜயென்மேல்
ஏவல் செய்தனுப்பிய ஈனப்பசாசை யிடுப்பொடித்து காட்டும்
காவலிருந்தெனை யாண்டருள்வாய் சந்தந்தோனி ராசகாரணனே

ஆறெழுத்தாலு தைந்தெழுத்தாலு மெண்பத்தோ ரட்சரத்தால்
ஈரெழுத்தாலு மெட்டெழுத்தாலு மிருத்தோ ரட்சரத்தால்
ஓரெழுத்தாலு முருவை செபித்து உச்சாட்டின் பேய்களுந்தன்
பேரெழுத்தாலும் மோட்டியுவாய் சந்தந்தோனி புண்ணியனே

சுருபஞ் சமைத்துச் சுள்ளாணிதைத்துச் சுடலையிலே
உருவே செபித்து யம்மணத்தோடிந் தோகிவிட்ட
செருப்பைக் கடித்த தீ நாகப்பேயைப் சிகைப்பிடித்து
நெருப்பால் யெரித்திடுவாய் சந்தந்தோனி ராசனென் குருவே

சாராயங்கள்ளுக்குங் கஞ்சாயபினிக்கும் பொரியதற்கும்
பூராயணமான எள்ளுப் புண்ணாக்கும் பொரியதற்கும்
வீராயமாக கூத்தாடும் பேயை மிகப்பிடித்தடித்தது
சீராயென யாண்டருள்வாய் சந்தந்தோனி ராசதிருமுனியே

உப்புப்புளி யுமிர் நீர் வலமும் வாயின் தம்பலமும்
செப்பமுடனே தேங்கா இளநீர் சேர்த்தடைத்து
வெப்பமுடனே புதைத்த கருவை மிகவெடுத்தெறிந்து
தப்பாதெனை யாண்டருள்வாய் சந்தந்தோனி ராசதிருமுனியே

கெங்கைக்கரையி வளிந்தோப்பிலே விவெகு கீர்த்தியுடன்
கண்கள் மகிழப் பலபள்ளம் போட்டுக் கருவியென்மேல்
கங்கையுடனே யனுப்பிய சத்துருவை சங்கரித்துன்
செங்கரத்தா வாசீர்வாதமருள்வாய் சந்தந்தோனி ராசதிருமுனியே

பேயைத் தொழுது உருவே ஜெபித்துப் பலிகொடுத்துத்
தாயத்துடனே யனுப்பின பேயைத் தலையுடைத்து
வாயைக் கிழித்து மயிரைப்பிடித்து வதைத்து நன்றாய்
நேயத்துடனே யெனையாண்டருள் சந்தந்தோனி ராசவென்குருவே

பிடிபிடியென வருந்தும்படியான பேயைப்பிடித்து நன்றாய்
இடி இடியாக இடித்தே பிசாசை யிடிப்பொடித்து
அடியடியாக அடித்தே யெனைவிட்டகற்றி யென்பால்
குடிகுடியாயிருந்தருள்வாய் சந்தந்தோனி ராசகுருமுனியே

காளிளிருசி, காட்டேரி, சங்கிலி, கருப்பன் மொண்டி
சூலிக்கெவுரி, மாடன், வயிரவன், சுப்பிரமணியனையும்
யாளி முகந்தோன்றுமுகன் வேலன் கோரனையுங்
கோழிபோல் முறித்திடுவாய் சந்தந்தோனி ராசகுருமுனியே

கட்டுவாய் பேயையும் தானைமீறிக் கடந்துவரும்
முட்டுவாய் பேயினீரலெடுத்து முடியறுத்து
வெட்டுவாயுந்தன் சுவிஷேச வாளால் விரட்டிடப்போய்
கொட்டுவாய் சுத்தியால் சந்தந்தோனி ராச குருமனியே

அபயமென்றுந்தன் திருமலர்ப்பாதத்தை யடிபணிந்தேன் -
பகையோர்க் ளென்மேலேவின் பேய்களைப் பார்த்து நன்றாய்ச்
சிகையைப் பிடித்துச் சடையையறுத்துத் தெறிக்கெடித்து
தகையாதெனை யாண்டருள்வாய் சந்தந்தோனி ராச்சற்குருவே

ஆதார நீயன்றி வேறோர் துணையில்லை யடியேனுக்கு முன்
பாதார விந்தம் படியருள்வாய்ப் பாருலகில்
வேதா பிதாச் சுதனிஸ்பிரீத்து சாந்தோடு வேண்டியெனைச்
சீதாரவிந்தருள்வாய் சந்தந்தோனி ராசென்குருவே

உன்னையல்லாம் லுலகினில் வேறெனக் குதவியுண்டோ
பிள்ளை பேறில்லை பெற்றவர் போலென்னை பேணுதற்கு "
சொன்னேனுமது திருமலர் பாத்திலெந்தன் துக்கமெல்லாம்
என்னை நீ யாருண்டருள்வாய் சந்தந்தோனி ராசவென்குரவே

தாங்கியேயுந்தன் திருமலர்ப்பாதத்தைச் சரணித்து நான்
தூங்கிக்கிடக்கின்ற வேளையில் மேவுஞ் சோதனையை
ஏங்கி என்னிடமேவும் பசாசை யிருகக்கட்டிகள்
ஓங்கியடித்திடுவாய் சந்தோந்தோனி ராசனென்னுத்தமனே

பழியாக என்மேற் பகையோர்கள் செய்யும் பார்வைகளுந்
தொழிலாகச் செய்யுங்சூனியம் பில்லிச்சுழிமுனையும்
மெலிதாக வென்னைச் சாராமலுந்தன்னிரு விழிபோல்
முழுதாகக் காத்தருள்வாய் சந்தந்தோனி ராசவென்மூர்த்திபனே

வர்மித்து என்னைக் கொலை செய்யப் பேயை வாலிடுத்து
கர்மத்தின் பில்லி சூனியங்கற்றவர்களின் வாயடைத்துப்
வர்மித்தறைந்த ஆணியும் ஆப்புமிகத் தெறிக்கடித்து இப்ப
தர்மத்தினாலென்னை யாண்டருள்வாய் சந்தந்தோனி ராச சற்குருவே

யைாலு மும்மைத் தொழுதேன் மனதிற் கலக்கமுற்று
பொய்யான பேய்களும் வந்தெனைச் சூழ்ந்து போயிடுமுன் :
மெய்யாக வந்து ஆசீர்வதித்து மேவியென்னால்
அய்யாவெனையாண்டருள்வாய் சந்தந்தோனியனு கூலனே

சலமாகவென்மேற் கொலைஞர்கள் செய்யுங் சல்லியத்தின்
இலமான பில்லி சூனியப் பேயைபிடித்திருக்கியெமன்
நிலமேவ வெட்டிரிணக்களஞ்செய்து நிமிஷத்திலென்
வலமாக வந்தருள்வாய் சந்தந்தோனி ராசமாமுனியே

அடிமீதிலென்மேற் பகையாளர் கூடிப்பகைகள் செய்யுந்
துடியான பில்லிசூனியப் பேயென்னை சூழவருமுன்
கடிதாக வந்து பேய்களைக் கட்டியென் கைவசமாய்க்
குடியாயிருந்திடுவாய் சந்தந்தோனி ராசகுரு முனியே

பேரெயெழுதி கருவதிற் சேர்த்துப் புதைத்து என்மேற
கூராயனுப்பிய பேயைப்பிடித்துக் கொலைப்படுத்தியதை
ஒரேயடி யாயடித்துப் பசாசையோட வெண்பாற்
நீராயிந்தருள்வாய் சந்தந்தோனி சிகாமணியே

கட்டுத்தெறித்த வில்வோதி யுண்டைடையச் செங்கையினால்
விட்டுத்தெறித்திடல் போலேயடிக்கு மெதிரியுடன்
கட்டுத்தெறிக்க வாணித்தெறிக்க கருத்தெறிக்க
ஒட்டுத்தெறிக்க அடித்திடுவாய் சந்தந்தோனி ராசவுத்தமனே

மானதைக்கண்ட வேங்கை போலென்னிடம் வருகும் பொல்லா
ஈனவாயுப் பேயையிடுப்பையொடித் இரு காலொடித்து
ஆனையைக் கண்ட சிங்கம் போல் சீறியடித்து நன்றாய்த்
தேனதுபோலெனை யாண்டருள்வாய் சந்தந்தோணி ராசவுத்தமனே

எலியதைக்கண்ட பூனையோ லென்னிட மிடறுசெய்ய
வலியதோர் சர்ப்பம் போலே வருகின்றவன்னியனை
சலியாதடித்துக் தலையையுடைத்துப் பேய்ச்சந்தொடித்து
நலியாதெனை யாண்டருள்வாய் சந்தந்தோனி ராநன் முனியே

கொக்கதைக்கண்ட ராசாளி போலென்மேற் கொக்கரித்து
அக்கிரமத்தோடே தெடிவருகின்ற வலகையை நீர்
சக்கரத்திருத்தி வையமென்றோடச் சாதித்தென்பால்
இக்கணமெழுந்தருள்வாய் சந்தந்தோணி ராசமென் குருவே

வெங்கண் சிவந்து சீறிச்சினந்து வேகமுற்றுச்
சிங்கம்போ லென்னைத் தேடித்திரிகின்ற பேய்களை நீர்
பங்கமழித்த பசாசைப் பிடித்துப் பறக்கடித்துத்
தங்கம் போலென்னை யாண்டருள்வாய் சந்தந்தோனி ராசதவமுனியே

பரவோடு குத்திப் பனியிற்புதைந்து வெகுபாஷையிட்டு
சூலோடு குத்திச் சுடலையிற் புதைத்த சதிகளை நீர்
சாலோடு சாவல் குத்தித் திணித்துப் புதைத்த சதிகளை நீர்ப்
காவலுதைத்திடுவாய் சந்தந்தோனி ராச காரணனே

புட்டுக் கொழுக்கட்டை யெள்ளுருண்டை தேங்காய் பொரியதற்கும்
இட்டப் படைப்பு ஏங்கி வருகின்ற யினப்பசாசுகளை
மட்டுப்பட்டிருக் வுமதானையிட்டேன் வரும் பேய்களை நீர்
கட்டுக்குள்ளாக்கிடுவாய் சந்தந்தோனி ராச காவலகே

கார்ப்பது மென்னைக் கடனுமக்காக நின் கண் திறந்து -
பார்ப்பதமக்கு பாரமல்லோ விந்தப் பாரிலென்னை
ஏற்பதுமென்னைக் கைதூக்கி யெடுப்பது மென்னிடாதனை
தீர்ப்பது முன்கடனாஞ் சந்தந்தோனி ராச திருமுனியே

ஐம்பதுருக்கள் நின்னருள் சேவித்த வைனித்தனில்
வம்பானபேய்கள் மயங்கியலைந்து மடிவதற்குள்
நின்பாதஞ் சோவைத் துணையைத்தந்தாண்டருள் நீள்புவியிற்
பண்பாகத் தீர்த்தருள்வாய் சந்தந்தோனி ராச புண்ணியனே

வாழி விருத்தம்

ஞாலத்தை மீட்ட இயேசு நாற்பதாம் நாளும் வாழி
வால சந்நியாசியான வள்ளலந்தோனி வாழி
கோல மேற்றிராணி வேத குருக்களுமிகவே வாழி
சிலநற்சபையும் நாளும் செழித்துமே வாழி வாழி