பேயோட்டும் செபம்.

(பாப்பிறை 13 - ஆம் சிங்கராயர் அனுமதியுடன்) "Prayer against Satan and the Rebellious Angels" இச் செபத்தை ஆயரின் அனுமதி பெற்ற குருக்கள் அல்லதது பொது நிலையினர் தான் அதிகாரபூர்வமாக செபிக்க முடியும்.

பிதா, சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே - ஆமென்.

எங்கள் ஆண்டவரும் இறைவனுமாகிய இயேசு கிறிஸ்துவின் பெயராலும், இறைவனின் அன்னையான அமலோற்பவ மரியாள், அதிதூதரான மிக்கேல், அப்போஸ்தலர்களான இராயப்பர், சின்னப்பர், சகல தூயவர்களின் பரிந்து பேசுவதிலும் திடங்கொண்டு, நம்பிக்கையுடன் சாத்தானின் தாக்குதலையும், தந்திரங்களையும் அகற்றிட முன் வந்துள்ளோம்.

சங்கீதம் 67: இறைவன் எழுகின்றார். அவர் எதிரிகள் சிதறுகின்றனர். அவரைப் பகைத்தவர்கள் அவர் முன்னின்று வெருண்டோடுகின்றனர். புகை வெளியேற்றப்படுவது போல் அவர்கள் ஓட்டப்படுகின்றனர். மெழுகு, தீ முன் உருகுவது போல் தீயவர்கள் ஆண்டவர் முன் அழிந்தொழிவர்.

இதோ ஆண்டவருடைய சிலுவை சத்துருக்களே வெருண்டோடுங்கள்.

தாவீதின் வழித் தோன்றலாகிய அவர் யூதாவின் மரபின் சிங்கத்தினை வென்றார்.

இறைவனின் இரக்கம் நம்மீது இறங்குவதாக.

உம்முடன் எங்களுக்குள்ளே நம்பிக்கை பெருமளவிற்குத் தக்கதாக.

சிலுவை அடையாளத்தில், குருவானவர் ஆசிர்வதிப்பார். இல்லறவாசி இச்செபத்தைச் செய்தல் அமைதியாக உறுதியோடு சிலுவை அடையாளத்தை வரைய வேண்டியது.

செபம்

நீங்கள் யாராக இருப்பினும், அசுத்த அரூபிகளே, சாத்தானின் எல்லா சக்திகளே, எல்லா நரக முற்றுகையாளர்களே, எல்லா தீய கணங் களே, கூட்டங்களே, பிரிவுகளே, ஆண்டவரான இயேசுகிறிஸ்துவின் நாமத்தாலும், வல்லமையாலும், நீங்கள் திருச்சபையிலிருந்து இறைவனின் சாயலில் பகைக்கப்பட்டு, தெய்வீக செம்மறியின் விலைமதிப்பற்ற இரத்தத்தால் மீட்கப்பட்ட ஆன்மாக்களிலிருந்தும் களைந்தெறியப்பட்டு துரத்தப்படக் கடவீர்களாக.

✠ மிகவும் தந்திரமிக்க அரவமே, நீ இனிமேல் மனுக்குலத்தை ஏமாற்றவும், திருச்சபையை வாதிக்கவும், கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களைக் கோதுமைப் புடைப்பதுபோல் துயருறுத்தவும் துணியாய் மாபெரும் கடவுள் உனக்கு கட்டளையிடுகிறார். உன் ஆங்காரத்தால் இப்பொழுதும் அவர் உனக்கு சரி நிகர் சமம் என நீ உரிமை கொண்டாடி வருகின்றாய். எல்லா மனிதரும், மீட்புப் பெறவும் உண்மையின் அறிவை அடைந்து கொள்ளவும் வேண்டுமென்பதே அவர் விருப்பம் (1 தீமோத் 2:4) 36

✠ தந்தையாம் இறைவன் உனக்குக் கட்டளையிடுகிறார். இறைவனாம் தூய ஆவி உனக்கு ஆணையிடுகிறார். இறைவனின் வார்த்தையால் ஊனான கிறிஸ்து உன்னை பணிக்கின்றார். எங்கள் மனுக்குலத்தைக் காத்திட உன் பொறாமைக்குப் பலியான அவர் தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்கு கீழப்படிபவரானார். (பிலிப் 2:8)

தனது திருச்சபை பலமான பாறையில் அமைத்து அவர் உலக முடிவு வரையில் எல்லா நாட்களிலும் நான் அதனுடன் இருப்பதால் நரக வாயில்கள் அதனை மேற்கொள்ளாது என்றார். தூய திருச்சிலுவை அடையாளம் எனக்குக் கட்டளையிடுகிறது. கிறிஸ்தவ விசுவாசத்தின் பரம சக்திகள் உனக்குக் கட்டளையிடுகின்றன. மகிமை பொருந்திய இறைவனின் தாயாம் கன்னி மரியம்மாள் உனக்குக் கட்டளையிடுகிறாள். அவள் தனது தாழ்ச்சியால், அமலோற்பவமாய் உற்பவித்த தருணத்திலிருந்து உன் ஆங்காரத்தலையை நசுக்கினாள். இராயப்பர், சின்னப்பர் மற்றும் தூய அப்போஸ்தலர்களின் விசுவாசம் உனக்குக் கட்டளையிடுகிறது. வேதசாட்சிகளின் இரக்கமும் தூயவர்களின் தூய பரிந்து பேசுதலும் உனக்குக் கட்டளையிடுகின்றனர்.

இவ்வாறு சபிக்கப்பட்ட சாத்தானே,
விலங்கே, நரகப் படைப்புக்களே
உயிருள்ள தேவனால் உங்களுக்கு வெளியேறுங்கள்
எனக் கட்டளையிடுகின்றோம்.

✠ பரிசுத்த கடவுளால் தன் "ஒரே பேறான மகனையே அளிக்கும் அளவுக்கு உலகின் மேல் அருள் கூர்ந்தார். (அரு. 3.3) கடவுள் பெயரால் கட்டளையிடுகின்றோம்.

மனிதரை ஏமாற்றுவதையும் நித்திய அழிவின் நஞ்சை அவர்களுக்கு ஊற்றுவதையும் விட்டுவிடுங்கள். திருச்சபைக்கும் அதன் உரிமைகட்கும் தீங்கிழைப்பதை நிறுத்தி விடுங்கள். மீட்பின் பகைவனுமான சாத்தானே! அப்பாலே போ! உனது வேலைகள் . ஒன்றிற்குமே இடமில்லாத கிறிஸ்துவிற்கு இடமளிப்பாய் தனது இரக்கத்தின் வழியாய் தனதாக்கிக் கொண்ட ஏக கத்தோலிக்க அப்போஸ்தலிக்கத் திருச்சபைக்கு இடமளிப்பாய். இறைவனின் வல்லமை மிகு கரங்களின் முன் பணிவாய் உனக்கு நடுக்கந்தரும் தூய இயேசுவின் திருப்பெயரை நாங்கள் உரைக்கும் போது நடுங்கி ஓடுவாய். இப்பெயர் நரகத்தை நடுங்கச் செய்கின்றது. இப்பெயருக்கு, "பரதத்தின் நலன்களும், வல்லமையும், எல்லைகளும், பணிவுடன் பணிகின்றன. இப்பெயரைக் கெரூபிம், செராபிம் முடிவில்லாதது. "பரிசுத்தர், பரிசுத்தர் சேனைகளின் இறைவனாகிய ஆண்டவர் தூயவர்" என ஆர்ப்பரிக்கின்றது.

ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்கள் குரல் உம்மிடம் வருவதாக.
ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
உம்மோடும் இருப்பாராக.

செபிப்போமாக.
வானக இறைவா! பூமியின் இறைவா! வான் தூதர்களின் இறைவா! அதி தூதர்களின் இறைவா! பிதா பிதாக்களின் இறைவா! இறைவாக்கினர்களின் இறைவா! அப்போஸ்தலர்களின் இறைவா! வேதசாட்சிகளின் இறைவா! துதியர்களின் இறைவா! கன்னியர்களின் இறைவா! மரணத்திற்குப் பின் வாழ்வையும், உழைப்பிற்குப்பின் ஓய்வையும் அருளும் வல்லமையுள்ள இறைவா! ஏனெனில் உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை . இருக்கவும் இயலாது. காணும், காணாத பொருட்களைப் படைத்தவர் நீரே! உமது ஆட்சிக்கு முடிவில்லை. உமது மகத்துவ திருமுன் நாங்கள் தெண்டனிட்டு உமது வல்லமையால், துஷ்ட அரூபிகளின் கொடுமையிலிருந்து எங்களை விடுவிக்க வேண்டுகின்றோம். அவைகளின் தந்திரங்கள், பொய்யுரைகள், கடுஞ்சினத்தீதுகளிலிருந்து எங்களை விடுவிக்க வேண்டுகின்றோம். உமது வன்மை மிகும் பாதுகாப்பை எமக்களித்து நாங்கள் நலமுடன் வாழச் செய்தருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மூலம் உம்மை மன்றாடுகின்றோம். எங்களை காத்தருளும் ஆண்டவரே!திருச்சபை சமாதானத்திலும், உரிமையிலும், உமக்குத் தொண்டு செய்ய உம்மை மன்றாடுகின்றேன்.

எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். திருச்சபையின் எல்லாப் பகைவர்களையும் நசுக்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (தீர்த்தம் தெளிக்கவும்)