20. கண்கட்டினத்தின் பேரில்

எண்ணடங்காத கோட்டி இயேசுவே உம்மை யூதர் 
பண்ணவே நினைத்து ஒன்றாய் பாதக நீசரானோர், 
கண்ணதை சீலை கொண்டு கட்டியே அடிகள்பட்ட 
புண்ணிய இயேசுவென்னும் பூரணா அருள் செய்வீரே.