அர்ச்சியசிஷ்ட பொம்பே மாதாவுக்கு 2-வது மன்றாட்டு.

மகத்துவமும் மகிமைப் பிரதாபமும் கொண்ட அரசியே, உமது ஆசனத்தண்டையில் சாஷ்டாங்கமாய் விழுந்து, அணை கடந்த துயரப்பிரலாப சாகரத்தில் அமிழ்ந்தியிருக்கும் என்னாத்துமம் உம்மை வணங்குகிறது.

இதோ என் துன்ப துரிதங்களில் நம்பிக்கையோடு என் கண்களை ஏறெடுத்து எவராலும் புறக்கணிக்கப்பட்ட ஏழைகளும் தரித்திரரும் வசிக்கும் அவ்விடத்தை உமது வாசஸ்தலமாகத்தெரிந்து கொண்ட உம்மை நோக்கிப் பார்க்கிறேன்.

இதன் முன்னே அஞ்ஞான ஆசாபாசக்காட்சியின் ஆனந்தக்களறியும் நகருமாயிலங்கி, இப்போது அழிவும் மெளனமும் அரசாளும் அத்தலத்துக்கருகில் நின்று, நீர் இத்தாலியாவின் எத்திசையிலும், கத்தோலிக்க இராச்சியம் எங்குமுள்ள உமது தேச மக்களை உமக்கோர் ஆலயத்தைக் கட்டுவதற்காக ஜெயசீல இராக்கினியாய் உரத்த சத்தத்தோடு அழைக்கிறீர்.

ஆண்டவளே! அசுத்தத்தில் அமிழ்ந்து கிடக்கும் என் ஆத்துமத்தின் பேரில் இரக்கமாயிரும். அணை கடந்த துன்ப துரி தங்களாலும் நிந்தை அவமானங்களாலும் நிறைந்திருக்கும் என் பேரில் இரங்கியருளும்.

பசாசுக்களை விரட்டி ஓட்டுகிறவளே! என்னைச் சூழ்ந்துள்ள சத்துருக்களிடமிருந்து என்னைப் பாதுகாத்தருளும். கிறிஸ்தவர்களின் சகாயமே, நான் நிர்ப்பாக்கியனாய் வீழ்ந்து கிடக்கும் இது சோதனைகளினின்று என்னைக் காப்பாற்றியருளும்.

என் சீவியம், இதோ இவ்வளவு ஆபத்துக்குள்ளாகி, என்னாத்துமத்தை யடுத்திருக்கும் மரணத்தை ஜெயித்து, சமாதானத்தையும், அமரிக்கையையும், அன்பையும், ஆரோக்கியத்தையும் அடியேனுக்குக் கட்டளையிட்டருள்வீராக

(கிருபை தயாபத்து ஜெபம்)

ஆமென்.